Blog

அருளுடைமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

அருளுடைமை

  1. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள.

விளக்கம்:

கொடிய   உள்ளம்   கொண்ட  இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும்  அந்தச் செல்வம்   அருட்செல்வத்துக்கு ஈடாகாது.

2. நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

பலவழிகளால்    ஆராய்ந்து    கண்டாலும்    அருள்  உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

விளக்கம்:

அருள்   நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

4. மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை.

விளக்கம்:

எல்லா  உயிர்களிடத்தும்  கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக்   கொண்ட  சான்றோர்கள்   தமது உயிரைக் பற்றிக் கவலை

அடைய மாட்டார்கள்.

5. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு

மல்லன்மா ஞாலங் கரி.

விளக்கம்:

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை  உணராமல் கடமையாற்றலாம்  என்பதற்கு,  காற்றின்    இயக்கத்தினால் வலிமையுடன்

திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

6. பொருள் நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

விளக்கம்:

அருளற்றவர்களாய்த்   தீமைகளைச்  செய்து  வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

7. அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்

கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

விளக்கம்:

பொருள்  இல்லாதவர்களுக்கு   இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை  உள்ளம்  இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும்

சிறப்பாக அமையாது.

8. பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

விளக்கம்:

பொருளை   இழந்தவர்  அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

விளக்கம்:

அறிவுத்   தெளிவு   இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய   முடியுமா?   அது  போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும்

அறச்செயலும் இருக்கும்.

10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேற் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட    மெலிந்தவர்களைத்   துன்புறுத்த   நினைக்கும் போது, தன்னைவிட    வலியவர்    முன்னால்  அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு

இருப்பதை மறந்துவிடக் கூடாது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories