Blog

அறன் வலியுறுத்தல்

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

அறன் வலியுறுத்தல்

  1. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூங்
    காக்க மெவனோ உயிர்க்கு.

விளக்கம்:

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

2. அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.

விளக்கம்:

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

3. ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

விளக்கம்:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.

4. மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.

விளக்கம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

5. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.

விளக்கம்:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

6. அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

விளக்கம்:

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

7. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

விளக்கம்:

அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

விளக்கம்:

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

9. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.

விளக்கம்:

அறத்தான் வருவதே இன்பம் மற்றுஎல்லாம் புறத்த புகழும் இல.

10. செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.

விளக்கம்:

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories