அறிவுடைமை
September 23, 2023 2025-01-11 13:57அறிவுடைமை
அறிவுடைமை
1.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்: அறிவு என்பது அழிவிலிருந்து நம்மை காக்கும் கருவியாகும். பகைவர்களால் அழிக்க முடியாத கருவியாகும்.
2.சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்பது தறிவு.
விளக்கம்: மனம் போகும் பாதையில் தானும் போகாமல், தீமையை விட்டு நன்மையானவற்றை செய்வதே சிறந்த அறிவாகும்.
3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: ஏதாவது ஒரு செய்தியை யார் கூறினாலும்,அச்செய்தியின் கருத்தை ஆராய்ந்து அறிவது அறிவு ஆகும்.
4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: தான் சொல்லும் கருத்தை மற்றவர்கள் எளிதாக புறியவும், மற்றவர்கள் சொல்லும் கருத்தை புறிந்து கொள்வதும்,அறிவுடையார்களின் செயலாகும்.
- உலகந் தழீஇயது தொட்பம் மலர்தலுங்
கூம்பலு இல்ல தறிவு.
விளக்கம்: உலகத்தை புறிந்து நடப்பதே சிறந்த ௮றிவு, தெளிவும், கலக்கமும் மாறிமாறி வந்தாலும் ஓரே சீராக இருப்பதே அறிவு.
6.எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வது துறைவ தறிவு.
விளக்கம்: உலகத்தோடு ஓத்து நடப்பதே அறிவாகும்.எனக்கு எல்லாம்தெரியும் என்று யார் கூறுவதையும் கேட்கமல் இருந்தால் பாவமும் பழியும் வந்து சேரும்.
7.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
விளக்கம்: அறிவுடையவர்கள், எதிர்காலத்தில் வர போவதை அறிந்து செயல்படுவர். அறிவில்லாதவர் பின்விளைவை நோக்காது செயல்படுவர்:
8.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
விளக்கம்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவது அறிவடையார்களின் செயலாகும்.அஞ்சாமல் இருப்புது அறிவில்லாதவர்களின் செயலாகும்.
9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு கில்லை
அதிர வருவதோர் நோய்.
விளக்கம்: பின்வர போவதை முன்னே அறிந்து தன்னை காத்து கொள்பவர்கள் அறிவுடையவர்கள், அவர்களுக்கு எந்த துன்பமோ நோயோ வராது.
10.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் மிலர்.
விளக்கம்: அறிவடையவர் எல்லாம் உடையவராக கருதப்படுவர் அறிவு இல்லாதவரிடம் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர்.