Blog

அழகிய சொக்கநாதர்

99
Old Syllabus

அழகிய சொக்கநாதர்

நூற்குறிப்பு
  • காலம் 19-ம் நூற்றாண்டு
  • திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் வன்னியர்க்கு மகனாகப் பிறந்தார்
  • முன்சீப் நீதிமன்றத்தில் பிரதி எழுதும் பணி. மாதம் பத்து ரூபாய் சமபளம். “எனக்கு மாசம்பத்து வருகிறது” என இரட்டுற மொழிவார் (மாசம் – பத்து, மாசம்பத்து)
  • சங்கரநயினார் கோவிலுக்கு “இராசைமாநகர்” என்ற பெயர் உண்டு
  • இராசை கோமதி அம்மைபதிகனம், முத்துசாமிப்பிள்ளை, காதற்பிரபந்தம், காந்தியம்மை கும்மி, கோதைக் கும்மிப் பாடல்கள் எனப் பல நூல்களை இயற்றியவர்.
மேற்கோள்
இவர் பாடிய மாமரத்திற்கும் கிழிந்த குடைக்கும் உள்ள சிலேடை பின்வருமாறு.பிஞ்சு கிடக்கும்; பெருமழைக்குத் தாங்காது;
மிஞ்ச அதனுள் வெயில் ஒழுகும்; – தஞ்சம் என்றோர் வேட்டது அருள் முத்துசுவாமித்துரை ராஜேந்திரா கேள்
கோட்டுமரம் பீற்றல் குடை
திருமாலும் கைக்கடிகாரமும்சக்கரத்தி னாலரவந் தாங்தலி னோடுமுள்ளெட்(டு)
அக்கரத்தி னால்வேலை யார்வதினால்  – மிக்ககவன்பர்
முக்கியமாய்க் கைக்கொளலால் முத்துசா மித்துரையே
கைக்கடியா ரந்திருமால் காண்.

– அழகிய சொக்க நாதர்

படைப்புகள்:
  • காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
  • ராசி கோமதி அம்மைபதிகம்
  • முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
  • கந்தியம்மை கும்மி
  • கோதை கும்மி
சிறப்பு:
  • காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்
  • சிலேடை பாடுவதில் வல்லவர்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories