Blog

ஈகை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

ஈகை

1.வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்                               (6th Tamil)

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

விளக்கம்: வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை: பிறர்க்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.

 

2.நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

விளக்கம்: நல்ல அறச்செயலுக்கே என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே: மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.

 

3.இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள.

விளக்கம்: ஒருவன் வந்து, நான் யாதும் இல்லாதவன் என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.

 

4.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு.

விளக்கம்: உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.

 

5.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

விளக்கம்: பசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும். அதுவும், அப் பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்கப் பிற்பட்டதே ஆகும்.

 

6.அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

விளக்கம்: பலரோடும் பகுந்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையானதாகும்.

 

7.பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

விளக்கம்: பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.

 

8.ஈந்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை                 (6th Tamil)

வைத்திழக்கும் வன்க ணவர்.

விளக்கம்: தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள்,பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?

 

9.இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.

விளக்கம்: தாம் முயன்று தேடி நிரப் பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலைவிட துன்பம் தருவதாகும்.

 

10.சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

விளக்கம்: சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை. பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories