Blog

ஊக்கமுடைமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

ஊக்கமுடைமை

1.உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
விளக்கம்:
ஊக்கம் உடைமையை உடையவர் என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது, ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.
2.உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை                                (6th Tamil)
நில்லாது நீங்கி விடும்.
விளக்கம்:
ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும். மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.
3.ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
விளக்கம்:
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள்.
4.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அடைவிலா                                  (6th Tamil)
ஊக்கம் உடையான் உழை.
விளக்கம்:
தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம் தானே அவரிருக்கும் இடத்திற்கு வழகேட்டுக்கொண்டு போய்ச்சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.
5.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்                                 (6th Tamil)
உள்ளத் தனையது உயர்வு. *****
விளக்கம்:
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும். அது போலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.
6.உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது                                       (6th Tamil)
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
விளக்கம்:
உயர்ந்த நிவைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும். அந்த நிலை கை கூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும்கை விடவே கூடாது.
7.சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
விளக்கம்:
தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலை நிறுத்தும். அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.
8.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
விளக்கம்:
யாம் வள்ளன்மை உடையோம் என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.
9.பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.
விளக்கம்:
பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.
10.உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம் மக்களாதலே வேறு.
விளக்கம்:
ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே. அந்த ஊக்கம் ஆசிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories