Blog

எழுத்துப்‌ பிழை, ஒற்றுப்பிழை அறிதல்

Class 10 இலக்கணம்

எழுத்துப்‌ பிழை, ஒற்றுப்பிழை அறிதல்

கடமையை செய்‌; பலனை கேள்‌ (கடமையைச்‌ செய்‌ பலனைக்‌ கேள்‌)

மர பொருள்கள்‌ வாடகைக்கு கிடைக்கும்‌. (மரப் பொருள்கள்‌ வாடகைக்கு கிடைக்கும்‌.)

திரைபடம்‌ காண வருக. (திரைப்படம்‌ காண வருக)

எதிர்மறைச் சொற்கள்

வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

தன்மை  படர்க்கை 
ஒருமை நான் அல்லேன். ஆண்பால் அவன் அல்லன்.
பன்மை நாம் அல்லோம். பெண்பால் அவள் அல்லள்.
முன்னிலை    பலர்பால் அவர் அல்லர்.
ஒருமை நீ அல்லை. ஒன்றன்பால் அஃது அன்று.
பன்மை நீவீர் அல்லீர். பலவின் பால் அவை அல்ல.

‘வேறு, உண்டு, இல்லை’ – ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.

1. அதைச் செய்தது நான் அன்று.                                                                    – அதைச் செய்தது நான் அல்லேன்

2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.                                           –  பானையை உடைத்தது கண்ணன் அல்லன்

3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.                                       – மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.            – சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்

5. பகைவர் நீவீர் அல்லர்.                                                                                    – பகைவர் நீவீர் அல்லீர்

 

1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை _________  (அல்ல)

2. உங்களோடு வருவோர் _________ அல்லோம்.          (நாம்)

3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் _________ (அல்லன்)

4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன _________  (அல்ல)

5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ____________ அல்லை.          (நீ)

வல்லினம் மிகவேண்டிய இடங்கள் சான்று
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும் அச் சட்டை
அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும் இந்தக்காலம்
எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் எத் திசை?
எந்த என்னும் வினாச் சொல்லின்
பின்னும்
எந்தப்பணம்?
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் கதவைத் திற, காட்சியைப்பார்
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் முதியவருக்குக்கொடு, மெட்டுக்குப்பாட்டு
என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் எனக்கேட்டார், வருவதாகக்கூறு
வல்லினம் மிகும் இடங்கள் சான்று
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் அதற்குச் சொன்னேன், இதற்குக் கொடு, எதற்குக் கேட்கிறாய்?
இனி, தனி ஆகிய சொற்களின் பின் இனிக் காண்போம், தனிச் சிறப்பு
மிக என்னும் சொல்லின் பின் மிகப் பெரியவர்
எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் தீப் பிடித்தது, பூப் பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் கூவாக் குயில், ஓடாக் குதிரை
வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் கேட்டுக் கொண்டான், விற்றுச் சென்றான்
(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் ஆடச் சொன்னார், ஓடிப் போனார்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் புலித்தோல்
திசைப் பெயர்களின் பின் கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் மல்லிகைப்பூ, சித்திரைத் திங்கள்
உவமைத் தொகையில் தாமரைப்பாதம்
சால, தவ, தட, குழ என்னும் உரிச் சொற்களின் பின் சாலப்பேசினார், தவச் சிறிது
தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் நிலாச் சோறு, கனாக் கண்டேன்
சில உருவகச் சொற்களில் வாழ்க்கைப்படகு, உலகப்பந்து
தொடர் தரும் பொருளைக் கூறுக.

அ) சின்னக்கொடி / சின்னகொடி

  1. சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
  2. சின்ன கொடி – சிறிய கொடி

ஆ) தோப்புக்கள் / தோப்புகள்

  1. தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
  2. தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்

இ) கடைப்பிடி / கடைபிடி

  1. கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
  2. கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது

ஈ) நடுக்கல் / நடுகல்

  1. நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
  2. நடுகல் – நினைவுச்சின்னம்

உ) கைம்மாறு / கைமாறு

  1. கைம்மாறு – உதவி செய்தல்
  2. கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)

ஊ) பொய்ச்சொல் / பொய்சொல்

  1. பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
  2. பொய் சொல் – பொய் சொல்வது தவறு

தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பத் காமதை
ஊனிர்லே எம்முயிர் உல்லவும் – நிதம்
ஓதி யுர்நதின புருமவாமே”                            – கவிமணி தேசிக விநாயகனார்

விடை:-

“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பத் காமதை
ஊனிலே எம்முயிர் உள்ளவும் – நிதம்
ஓதி யுர்நதின புறுமவாமே”                      – கவிமணி தேசிக விநாயகனார்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories