ஐங்குறுநூறு
October 6, 2023
2025-01-11 13:57
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு
-
திணை = அகத்திணை
-
பாவகை = ஆசிரியப்பா
-
பாடல்கள் = 500
-
பாடியோர் = 5
-
அடி எல்லை = 3-6
ஐங்குறுநூறு விளக்கம்
-
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
-
குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
தொகுப்பு
-
தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
-
தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
உரை, பதிப்பு
-
முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
-
முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
கடவுள் வாழ்த்து
-
இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
நூல் பகுப்பு
-
ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு தினைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
-
ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
-
ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
-
குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.
பாடியோர்
-
இந்நூலை இயற்றியவர்கள் பற்றிப் பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
மருதமோ ரம்போகி, நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலை ஓதலாந்தை பனிமுல்லை பேயனே
நூலை ஓது ஐங்குறு நூறு
|
-
மருதம் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
-
நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
-
குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
-
பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
-
முல்லை திணை பாடல்கள் பாடியவர் = பேயனார்
நூலில் கூறப்படும் அரசர்கள்
கடுமான்
|
குட்டுவன்
|
ஆதன்
|
அவினி
|
கொற்கை கோமான்
|
மத்தி
|
நூலில் கூறப்படும் ஊர்கள்
தொண்டி
|
தேனூர்
|
கழார் (காவிரி)
|
கொற்கை
|
கிடைக்காதவை
-
ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஐங்குறுநூறு நூல் குறிப்பு
-
தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல் இதுவே.
-
தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
-
அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
-
சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
-
இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
-
தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.
முக்கிய அடிகள்
-
அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மானுண்டு எஞ்சிய கலுழி நீரே – (கபிலர்)
-
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோய் யாயே – (ஓரம்போகியார்)
-
பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற்
கழனி யூரன்