Blog

கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை

99
Old Syllabus

கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை

கலித்தொகை
  • திணை = அகத்திணை
  • பாவகை = கலிப்பா
  • பாடல்கள் = 150
  • அடி எல்லை = 11-80
  • பாடியோர் = 5
பெயர்க்காரணம்
  • கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.
கலித்தொகை சிறப்பு
திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ
கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம்
பொங்கு கலி இன்பப் பொருள்
என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.
வேறு பெயர்கள்
  • கலி
  • குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்
உரை, பதிப்பு
  • நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி. வை. தாமோதரம்பிள்ளை
கடவுள் வாழ்த்து
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பாடியோர்
பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;
மருதனிள நாகன் மருதம்; – அருஞ்சோழன்
நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார் கண்ட கலி

 

கலி பாடல்கள் ஆசிரியர்கள்
குறிஞ்சி 29 கபிலர்
முல்லை 17 நல்லுருத்திரன்
மருதம் 35 மருத இளநாகனார்
நெய்தல் 33 நல்லந்துவனார்
பாலை 35 பெருங்கடுக்கோ
கடவுள் வாழ்த்து 1 நல்லுந்துவனார்
தொகுப்பு
  • இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
  • தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
  • நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.
கலித்தொகை சிறப்புகள்
  • தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித் தொகை மட்டுமே.
  • பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித் தொகை, பரிபாடல்
  • கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
  • பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
  • பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
  • நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
  • பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
  • கலித் தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித் தொகை மட்டுமே
  • பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித் தொகை மட்டுமே.
  • காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித் தொகை.
  • மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.
முக்கிய அடிகள்
  • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
     போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
     பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
     அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை
     அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
     செரிவேனப்படுவது கூறியது மறா அமை
  • காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
     யாழ்வரைத் தங்கியாங்கு
  • பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
     மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்

 

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்

குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.

கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்கள் இயற்றியவரும் இவரே.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories