Blog

கல்லாமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

கல்லாமை

  1. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.

விளக்கம்:

நிறைந்த  அறிவாற்றல்  இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம்  போட்டுக்   கொள்ளாமலே   சொக்கட்டான்   விளையாடுவதைப்

போன்றதாகும்.

2. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.

விளக்கம்:

கல்லாதவனின்  சொல்கேட்க  விரும்புவது,  மார்பகம்  இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

விளக்கம்:

கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

4. கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்

கொள்ளார் அறிவுடை யார்.

விளக்கம்:

கல்வி  கற்காதவனுக்கு  இயற்கையாகவே  அறிவு  இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில்  சிறந்தோன்  என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள

மாட்டார்கள்.

5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

விளக்கம்:

கல்வியறிவில்லாதவர்கள்   தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும்  போலி  வேடம்,  கற்றுத்   தேர்ந்த  அறிஞர்களிடம்

அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

6. உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

கல்லாதவர்களைக்  களர்நிலத்துக்கு   ஒப்பிடுவதே    பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

7. நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்

மண்மாண் புனைபாவை யற்று.

விளக்கம்:

அழகான    தோற்றம்    மட்டுமே    இருந்து,  ஆழ்ந்து   தெளிந்த அறிவில்லாமல்   இருப்பவர்கள், கண்ணைக்  கவரும் மண் பொம்மையைப்

போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

விளக்கம்:

முட்டாள்களிடம்   குவிந்துள்ள   செல்வம்,  நல்லவர்களை   வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

9. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றா ரனைத்திலர் பாடு.

விளக்கம்:

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

10. விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.

விளக்கம்:

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு  வேற்றுமை  அறிவு    நூல்களைப்    படித்தவர்களுக்கும்,  அந்த

நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories