Blog

காலமறிதல்‌

Old Syllabus

காலமறிதல்‌

1.பகல்வெல்லும்‌ கூகையைக்‌ காக்கை இகல்வெல்லும்‌

வேந்தர்க்கு வேண்டும்‌ பொழுது.

விளக்கம்‌: காகம்‌ தன்னை விட வலிமையான கோட்டானை பகலில்‌ வெல்லும்‌. அதுபோல பகைவரை வெல்ல அரசன்‌ காலம்‌ அறிந்து செயல்பட வேண்டும்‌.

 

2.பருவத்தோ டொட்ட ஒழுகல்‌ திருவினைத்‌

தீராமை யார்க்குங்‌ கயிறு.

விளக்கம்‌: ஒரு செயலை காலம்‌ அறிந்து செய்வதால்‌ செல்வத்தை தம்மை விட்டு நீங்காமல்‌ கட்டி வைக்கும்‌ கயிறாக காலம்‌ உதவுகிறது.

 

3.அருவினை என்ப உளவோ கருவியாற்‌

காலம்‌ அறிந்து செயின்‌.

விளக்கம்‌: ஒரு செயலை தொடங்க அதற்கான காலமும்‌ கருவியையும்‌ அறிந்து செயல்பட்டால்‌ வெற்றி கிடைக்கும்‌.

 

4.ஞாலம்‌ கருதினுங்‌ கைகூடும்‌ காலம்‌

கருதி இடத்தாற்‌ செயின்‌.

விளக்கம்‌: காலத்திற்காகக்‌ காத்திருந்து இடம்‌ அறிந்து செயல்பட்டால்‌ இவ்வுலகத்தையே வெல்ல முடியும்‌.

 

5.காலம்‌ கருதி இருப்பர்‌ கலங்காது

ஞாலம்‌ கருது பவர்‌.

விளக்கம்‌: இவ்வுலகத்தை ஆள நினைப்பவர்‌ அதற்கான காலம்‌ வரும்‌ வரை காத்திருப்பர்‌.

 

6.ஊக்கம்‌ உடையான்‌ ஒடுக்கம்‌ பொருதகர்‌

தாக்கற்குப்‌ பேருந்‌ தகைத்து.

விளக்கம்‌: ஊக்கம்‌ உடையவன்‌ காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பது ஆடு தன்‌ எதிரியை தாக்க பின்வாங்கி சென்று தாங்குவது போல

தாங்கி வெற்றி பெறுவான்‌ என்பதே.

 

7.பொள்ளேன ஆங்கே புறம்வேரார்‌ காலம்பார்த்‌

துள்வேர்ப்பர்‌ ஒள்ளி யவர்‌.

விளக்கம்‌: அறிவுடையவர்‌ தன்‌ பகைவர்‌ தீங்கு செய்தால்‌ உடனே கோபம்‌ கொள்ளாமல்‌ அதை மனதில்‌ வைத்துக்‌ கொண்டு தக்க காலம்‌ வரும்‌ வரை காத்திருப்பர்‌,

 

8.செறுநரைக்‌ காணின்‌ சுமக்க இறுவரை

காணின்‌ கிழக்காம்‌ தலை.

விளக்கம்‌: தமக்கு தீங்கு செய்தவரை பார்க்கும்போது பணிவாக நடந்து கொள்ள வேண்டும்‌. அவர்களுக்கு முடிவுகாலம்‌ வரும்‌ போது கெட்டு அழிவார்கள்‌.

 

9.எய்தற்‌ கரிய தியைந்தக்கால்‌ அந்நிலையே

செய்தற்‌ கரிய செயல்‌.

விளக்கம்‌: செய்தற்கரிய செயலை செய்ய அரிய வாய்ப்பு கிடைக்கும்‌ போதே செய்து முடித்தல்‌ வேண்டும்‌.

 

10.கொக்கொக்க கூம்பும்‌ பருவத்து மற்றதன்‌

குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம்‌: கொக்கு இரைக்கு காத்திருத்து இரை வந்ததும்‌ விரைந்து செயல்படுவது போல நாமும்‌ காத்திருந்து செயல்பட வேண்டும்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories