Blog

குறில்‌, நெடில்‌ வேறுபாடு

Class 2 இலக்கணம்

குறில்‌, நெடில்‌ வேறுபாடு

ஆய்த எழுத்தை ஒலிக்க கால அளவு – ½ மாத்திரை

குறில் எழுத்தை ஒலிக்க கால அளவு – 1 மாத்திரை

நெடில் எழுத்தை ஒலிக்க கால அளவு – 2 மாத்திரை

செய்‌, சேய்‌ என்னும்‌ இரண்டு சொற்களைப்‌ பாருங்கள்‌. செ – இஃது ஒற்றைக்கொம்பு. சே – இஃது இரட்டைக்கொம்பு.

ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பால்‌ பொருள்‌ எப்படி மாறுகிறது பாருங்கள்‌.

இதனைச்‌ செய்‌, தாய்சேய்‌ நலவிடுதி. கொடி பறக்கும்‌ – கோடிப்பணம்‌ கிடைக்கும்

அமுதன்‌ ——- குடித்தான்‌. (பால்‌ / பல்‌ )

சிற்பி ——- செதுக்கினான்‌. (சிலை / சீலை )

தென்றல்‌———- படித்தாள்‌. (படம்‌ / பாடம்‌ )

கடை ஏழு வள்ளல்களுள்‌ ஒருவர்‌ ———— . (பாரி / பரி)

முகிலனின்‌ பாட்டி —— கூறுவார்‌. (கதை / காதை)

  1. செவல்‌ கூவியது – சேவல்‌ கூவியது      2. ஆணும்‌ பேண்ணும்‌ சமம் – ஆணும்‌ பெண்ணும் சமம்     3. ஏட்டிக்குப்‌ பொட்டி பெசாதே – ஏட்டிக்குப் போட்டி பேசாதே

சேங்கல்லைக்‌ கொண்டு வீடு கட்டுவர்‌. (செ/சொ/சி)

வெல்‌ வடித்துக்‌ கொடுப்பது கொல்லர்க்குக்‌ கடனே. (வோ/வா/வே)

உலகப்பெதுமறை திருக்குறள்‌. (பே/பொ/பி)

தேல்வியே வெற்றியின்‌ முதல்படி. (டு/தோ/தை)

1. சிலை – சீலை

  • சிலையைத் திரைச் சீலையால் மறைத்திருக்கிறார்கள்.

2. தொடு – தோடு

  • தொடு உணர்வின் மூலம் தோடு காதில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம் .

3. மடு – மாடு

  • மாடு மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது

4. மலை – மாலை

  • மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்றேன் .

5. வளி – வாளி

  • வளிமண்டல காற்று பெற மரம் நட்டு வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .

6. விடு – வீடு

  • தீய பழக்கங்களை விட்டு விடு; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு

1. ஊண் – ஊன்

  • ஊண் – உணவு
  • ஊன் – மாமிசம்

2. திணை – தினை

  • திணை – உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
  • தினை – சிறு தானிய வகை

3. அண்ணம் – அன்னம்

  • அண்ணம் – உள் நாக்கு
  • அன்னம் – சோறு

4. வெல்லம் – வெள்ளம்

  • வெல்லம் – கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
  • வெள்ளம் – ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்

அ) இயற்கை – செயற்கை

விடை: பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.

ஆ) கொடு – கோடு

விடை: கொடுப்பதும், கொள்வதும் ஒரு எல்லைக்கோடு போன்றதே

இ) கொள் – கோள்

விடை: உறவினர்களை அனுசரித்து கொள். கோள் சொல்வதை தவிர்

ஈ) சிறு – சீறு

விடை: சிறு பாம்பானாலும் சீறும் குணத்தை கொண்டுள்ளது

உ) தான் – தாம்

விடை: தான் என எண்ணாமல் தாம் என் எண்ணுவோம்

ஊ) விதி – வீதி

விடை: என் தலைவிதியோ வீதிகளில் கூவி விற்பது என வியாபாரி சலித்தார்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories