குறில், நெடில் வேறுபாடு
December 27, 2024 2025-05-13 10:50குறில், நெடில் வேறுபாடு
ஆய்த எழுத்தை ஒலிக்க கால அளவு – ½ மாத்திரை
குறில் எழுத்தை ஒலிக்க கால அளவு – 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்க கால அளவு – 2 மாத்திரை
செய், சேய் என்னும் இரண்டு சொற்களைப் பாருங்கள். செ – இஃது ஒற்றைக்கொம்பு. சே – இஃது இரட்டைக்கொம்பு.
ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பால் பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள்.
இதனைச் செய், தாய்சேய் நலவிடுதி. கொடி பறக்கும் – கோடிப்பணம் கிடைக்கும்
அமுதன் ——- குடித்தான். (பால் / பல் )
சிற்பி ——- செதுக்கினான். (சிலை / சீலை )
தென்றல்———- படித்தாள். (படம் / பாடம் )
கடை ஏழு வள்ளல்களுள் ஒருவர் ———— . (பாரி / பரி)
முகிலனின் பாட்டி —— கூறுவார். (கதை / காதை)
- செவல் கூவியது – சேவல் கூவியது 2. ஆணும் பேண்ணும் சமம் – ஆணும் பெண்ணும் சமம் 3. ஏட்டிக்குப் பொட்டி பெசாதே – ஏட்டிக்குப் போட்டி பேசாதே
சேங்கல்லைக் கொண்டு வீடு கட்டுவர். (செ/சொ/சி)
வெல் வடித்துக் கொடுப்பது கொல்லர்க்குக் கடனே. (வோ/வா/வே)
உலகப்பெதுமறை திருக்குறள். (பே/பொ/பி)
தேல்வியே வெற்றியின் முதல்படி. (டு/தோ/தை)
1. சிலை – சீலை
- சிலையைத் திரைச் சீலையால் மறைத்திருக்கிறார்கள்.
2. தொடு – தோடு
- தொடு உணர்வின் மூலம் தோடு காதில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம் .
3. மடு – மாடு
- மாடு மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது
4. மலை – மாலை
- மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்றேன் .
5. வளி – வாளி
- வளிமண்டல காற்று பெற மரம் நட்டு வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .
6. விடு – வீடு
- தீய பழக்கங்களை விட்டு விடு; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு
1. ஊண் – ஊன்
- ஊண் – உணவு
- ஊன் – மாமிசம்
2. திணை – தினை
- திணை – உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
- தினை – சிறு தானிய வகை
3. அண்ணம் – அன்னம்
- அண்ணம் – உள் நாக்கு
- அன்னம் – சோறு
4. வெல்லம் – வெள்ளம்
- வெல்லம் – கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
- வெள்ளம் – ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்
அ) இயற்கை – செயற்கை
விடை: பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.
ஆ) கொடு – கோடு
விடை: கொடுப்பதும், கொள்வதும் ஒரு எல்லைக்கோடு போன்றதே
இ) கொள் – கோள்
விடை: உறவினர்களை அனுசரித்து கொள். கோள் சொல்வதை தவிர்
ஈ) சிறு – சீறு
விடை: சிறு பாம்பானாலும் சீறும் குணத்தை கொண்டுள்ளது
உ) தான் – தாம்
விடை: தான் என எண்ணாமல் தாம் என் எண்ணுவோம்
ஊ) விதி – வீதி
விடை: என் தலைவிதியோ வீதிகளில் கூவி விற்பது என வியாபாரி சலித்தார்.