i) தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
August 29, 2023 2025-01-11 13:57i) தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
i) தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி – பாரதிதாசன்
காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் – அண்ணாமலை
காந்தீயக் கவிஞர் – நாமக்கல் கவிஞர்
சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் – வேங்கட ராஜூலு ரெட்டியார்
உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் – மு.வரதராசனார்
சிலம்பு செல்வர் – ம.பொ.சிவஞானம்
சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வன் – அனுமன்
தமிழ் தென்றல் – திரு.வி.க.
வள்ளலார் – ராமலிங்க அடிகளார்
கிருத்துவக் கம்பன் – எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் – ஜி.யூ.போப்.
ஆசு கவி – காளமேகப் புலவர்.
எழுத்துக்கு – இளம்பூரணார்.
சொல்லுக்கு – சேனாவரையார்.
உரையாசிரியர் – இளம்பூரணார்.
உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்
தமிழ் வியாசர் – நம்பியார் நம்பி.
புதினப் பேரரசு – கோ.வி.மணிசேகரன்
ஏழிசை மன்னர் – தியாகராய பாகவதர்
மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
கவிக்கோ – அப்துல் ரஹ்மான்
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – கல்கி
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்
தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் – சேக்கிழார்
இலக்கண தாத்தா – மே.வி.வேணுகோபால்
முத்தமிழ்க்காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் – புதுமைப்பித்தன்
தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி – அண்ணாதுரை
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்
புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி
தமிழ் தாத்தா – உ.வே.சா
தமிழ் நாடகத் தந்தை – சம்பந்த முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர்
நாடக உலகின் இமயம் – சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக் கவிஞர் – சுரதா
தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்
தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் – வீரமாமுனிவர்
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன், பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு – வாணிதாசன்.
கவி யோகி – சுத்தானந்த பாரதி.
தற்கால உரைநடையின் தந்தை – ஆறுமுக நாவலர்.
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
வில்லுப் பாட்டுக்காரர் – கொத்தமங்கலம் சுப்பு.
ஆசிய ஜோதி – நேரு
ஆசிய ஜோதி நூலை எழுதியவர் – கவிமணி
மூல நூலை எழுதியவர் – எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் – மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின் அட்லி சேஸ் – சுஜாதா
தென்னாட்டு தாகூர் – வெங்கட ரமணீ
பண்டித மணி – கதிரேசன் செட்டியார்
சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் – காரைக்கால் அம்மையார்
வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி
பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி – பெரியாழ்வார்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. – அகிலன்
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்
கவிராட்சசன் – ஓட்டக்கூத்தர்
திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி – பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
நாட்டுப்புறவியலின் தந்தை – ஜேக்கப் கரீம்.
தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை – வானமா மாலை.
மண் தோய்ந்த புகழினான் – கோவலன்
வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் – ஆறுமுக நாவலர்
பொய்யா குலக்கொடி நதி – வைகை
கணக்காயர் என்பவர் – சோமசுந்தர பாரதியார்
நீதி நாயகர் – வேதநாயகம் பிள்ளை
கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் – மதுரை
தமிழ் நந்தி – மூன்றாம் நந்தி வர்மன்
தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் – சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் – நக்கீரர்
தமிழ் கவிஞருள் அரசர் – திருத்தக்கதேவர்
தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் – நம்மாழ்வார்
சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி – ஆண்டாள்
குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
சைவ சமயத்தின் செல்வி – மங்கையற்கரசியார்
திராவிட ஒப்பிலக்கண தந்தை – கார்டுவெல்
நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நாவலர் – சோமசுந்தர பாரதி
இந்திய சினிமா தந்தை – தாதாசாகிப் பால்கே
ஆட்சி மொழிக் காவலர் – ராமலிங்கனார்
ஆஸ்தானக் கவிஞர் – நா.காமராசன்
கவியரசு – வைரமுத்து,கண்ணதாசன்
திருக்குறளார் – வி.முனுசாமி
கவிப்பேரரசு – வைரமுத்து
தசாவதாணி – செய்கு.தம்பியார்
பண்மொழிப் புலவர் – அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் – கரிகாலன்
திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் – முதலாம் ராஜராஜன்
சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்
தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் – திருஞான சம்பந்தர்
ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர் – சுந்தரர்.
நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி – ஔவையார்
மும்மொழிப் புலவர் – மறைமலை அடிகள்
விஷ்ணுசித்தர் – பெரியாழ்வார்.
தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் – முத்துராமலிங்க தேவர்
திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் – திரிகூடராசப்ப கவிராயர்
இரட்டைப் புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்:
மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் – சீவக சிந்தாமணி
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள்
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் – சிலப்பதிகாரம்
இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
நெடுந்தொகை – அகநானூறு
கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை
பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி.
மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை
புறம், புறப்பாட்டு, தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு
வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை
பாணாறு – பெரும்பாணாற்றுப்படை
பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை – திருமுருகாற்றுப்படை
வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார்
சின்னூல் என்பது – நேமிநாதம்
வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை
திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் –பெரிய புராணம்
ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் – இராமாயணம்
முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்.
தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள்
குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி
குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்
உழத்திப்பாட்டு – பள்ளு
இசைப்பாட்டு –பரிபாடல் / கலித்தொகை
அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை
தமிழர் வேதம் – திருமந்திரம்
தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி – திருவாசகம்
தமிழ் வேதம் – நாலாயிர திவ்ய பிரபந்தம்
குட்டி தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
குட்டி திருவாசகம் – திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் – பிள்ளைத் தமிழ்.
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் – திருவள்ளுவ மாலை.
புலன் எனும் சிற்றிலக்கிய வகை – பள்ளு
தூதின் இலக்கணம் – இலக்கண விளக்கம்.
தமிழின் முதற்கலம்பகம் – நந்தி கலம்பகம்
தமிழர்களின் கருவூலம் – புறநானூறு
96 வகை சிற்றிலக்கிய நூல் – சதுரகாதி.
கிருஸ்துவர்களின் களஞ்சியம் – தேம்பாவணி
தமிழரின் இரு கண்கள் – தொல்காப்பியம் /திருக்குறள்
வடமொழியின் ஆதி காவியம் – இராமாயணம்
64 புராணங்களைக் கூறும் நூல் – திருவிளையாடற் புராணம்
இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் – சிலப்பதிகாரம் /மணிமேகலை
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்.
பாவைப்பாட்டு – திருப்பாவை
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்