Blog

நட்பாராய்தல்

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

நட்பாராய்தல்

  1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

விளக்கம்:

ஆராய்ந்து  பாராமல்  கொண்டிடும் தீய  நட்பு,  அந்த  நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

2. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

விளக்கம்:

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக  ஒருவர்  சாவுக்குக்   காரணமாகிற   அளவுக்குத்  துயரத்தை

உண்டாக்கி விடும்.

3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

விளக்கம்:

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள்  எவை? என்று  அனைத்தையும் அறிந்தே  ஒருவருடன் நட்புக்

கொள்ள வேண்டும்.

4. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

விளக்கம்:

பழிவந்து  சேரக்  கூடாது   என்ற   அச்ச   உணர்வுடன்   நடக்கும் பண்பார்ந்த  குடியில்  பிறந்தவருடைய   நட்பை   எந்த   வகையிலாவது

பெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும்.

5. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய

வல்லார்நட் பாய்ந்து கொளல்.

விளக்கம்:

தவறு  செய்கின்றவர்  கண்ணீர்  விடுமளவுக்குக்  கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண

வேண்டும்.

6. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்

விளக்கம்:

தீமை  வந்தால் அதிலும் ஒரு  நன்மை  உண்டு.  அந்தத்  தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

7. ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

விளக்கம்:

ஒருவருக்குக்   கிடைத்த   நற்பயன்   என்பது  அவர்   அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.

8. உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

விளக்கம்:

ஊக்கத்தைச்  சிதைக்கக்கூடிய  செயல்களையும்,  துன்பம்  வரும்போது விலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட

வேண்டும்.

9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.

விளக்கம்:

ஒருவர்  கொலைக்கு  ஆளாகும் போது  கூட,  தனக்குக்  கேடு வந்த நேரம்  கைவிட்டு  ஒதுங்கி  ஓடிவிட்ட  நண்பர்களை  நினைத்து விட்டால்

அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.

10. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

விளக்கம்:

மனத்தில்  மாசு இல்லாதவர்களையே  நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories