பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
January 31, 2025 2025-05-14 9:47பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
மா என்னும் சொல் – மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள்,மேன்மை, வயல், வண்டு
அகன்சுடர் – சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்
ஆர்கலி – கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்
கட்புள் – பறவை, ஒரு புலவன்
கொடுவாய் – புலி, வளைந்த வாய், பழிச்சொல்
திருவில் – வானவில், இந்திரவில்
“மரமது (1) மரத்தில் (2) ஏறி – (1) – அரசன் (ஆலமரம்); (2) – மா – குதிரை (மாமரம்)
மரமதைத்(3) தோளில் வைத்து – (3) – வேல் (கருவேலம்)
மரமது (4) மரத்தைக் (5) கண்டு – (4) – அரசன் (5) – புலி (வேங்கை)
மரத்தி (6) னால் மரத்தைக் (7) குத்தி – (6) – வேல்; (7) புலி (வேங்கை)
மரமது (8) வழியே சென்று – (8) – காட்டு வழி
வளமனைக் கேகும் போது
மரமது (9) கண்ட மாதர் – (9) – அரசன்
மரமுடன் (10) மரம் (11) எடுத்தார்” – (10) – (ஆலமரம்); (11) – அத்தி (அத்தி மரம்) ஆல் + அத்தி = ஆரத்தி
பாடலில், மரம் என்னும் சொல், இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
தால் – தாலாட்டு, தாலு, நாக்கு
உழுவை – புலி, ஒருவகை மீன், தும்பிலி
அகவுதல் – அழைத்தல், ஆடல், கூத்தாடல்
ஏந்தெழில் – மிக்க அழகு, மிக்க வனப்பு
அணிமை – சமீபம், அருகு, நுட்பம், நுண்மை
அவிர்தல் – ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்
அழல் – உட்டணம், எருக்கு, தீ, நெருப்பு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி
உவா – இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை
கங்குல் – இரவு, இருள், பரணி நாள்
கனலி – சூரியன், கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு
வருத்தனை – பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்
துரிஞ்சில் – வெளவால் வகை, சீக்கரி மரம்