Blog

பழமொழிகள்

Old Syllabus

பழமொழிகள்

  • புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
  • அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
  • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
  • எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற
  • உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்.
  • அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
  • நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற
  • குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
  • நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
  • ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்?
  • காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
  • இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
  • நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
  • அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
  • பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
  • அதிர அடிச்சா உதிர விளையும்.
  • குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
  • அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
  • தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம
  • அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
  • அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்
  • முயற்சி திருவினையாக்கும்
  • அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
  • சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
  • அறிவே ஆற்றல்
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • வருமுன் காப்போம்
  • சுத்தம் சோறு போடும்
  • பருவத்தே பயிர் செய்
  • பசித்து புசி
  • இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
  • சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
  • கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்

பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்

பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

  1. நாட்டுப்புறத்‌ தமிழ்‌ அறிவோம்‌

பின்வரும்‌ பழமொழிகளைப்‌ படியுங்கள்‌. (இவற்றைச்‌ சொலவடைகள்‌ என மக்கள்‌ சொல்வார்கள்‌.)

1. கோழியக்‌ கேட்டா ஆனம்‌ காச்சுவாங்க ( ஆனம்‌ – குழம்பு)

2. அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா ? (நாழி – தானியங்களை அளக்கும்‌ படி; அகவிலை – தானியவிலை)

3. திறந்த வீட்டுக்குத்‌ திறவுகோல்‌ எதுக்கு ? ( திறவுகோல்‌ – சாவி)

“நெல்லுக்கு நண்டோட; கரும்புக்கு ஏரோட; வாழைக்கு வண்டியோட; தென்னைக்குத்‌ தேரோட”

“பருவத்தே பயிர்‌ செய்‌, ஆடிப்பட்டம்‌ தேடி விதை”

“கேட்காத கடனும்‌ பார்க்‌காத பயிரும்‌ பாழ்”

பழமொழி                                                                                                                                       பொருள்

தாயைப்போலப்‌ பிள்ளை, நூலைப்போலச்‌ சேலை.                                                – உறவுமுறை

ஆடிப்பட்டம்‌ தேடி விதை.                                                                                                     – உழவு

மண்குதிரையை நம்பி ஆற்றில்‌ இறங்காதே. உறவுமுறை                                   – அறிவுரை

தை பிறந்தால்‌ வழி பிறக்கும்‌.                                                                                             – நம்பிக்கை

பசியாமல்‌ இருக்க வரந்தருவேன்‌, கொஞ்சம்‌ பழையது இருந்தால்‌ போடு.  – நகைச்சுவை

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories