பழமொழிகள் பொருளறிதல்
January 31, 2025
2025-05-13 6:32
பழமொழிகள் பொருளறிதல்
- புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
- அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
- வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
- எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற
- உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்.
- அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
- நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற
- குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
- சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
- நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
- ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
- ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்?
- காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
- இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
- நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
- அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
- பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
- அதிர அடிச்சா உதிர விளையும்.
- குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
- அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
- தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம
- அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
- அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்
- முயற்சி திருவினையாக்கும்
- அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
- சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
- அறிவே ஆற்றல்
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- வருமுன் காப்போம்
- சுத்தம் சோறு போடும்
- பருவத்தே பயிர் செய்
- பசித்து புசி
- இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
- கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
- தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
- மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
- கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- விருந்தும் மருந்தும் மூன்று வேளை
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு