Blog

பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌

Class 18 சொல்லகராதி

பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌

புள் என்பதன் வேறு பெயர் – பறவை; பறவைகள் இடம்பெயர்தல் – வலசைபோதல்; சரணாலயம் – புகலிடம்

க், ங் – நாவின் முதல், அண்ணத்தின் அடி                             ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை

ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி                          த், ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

 

சிந்துசமவெளி அகழாய்வில்    – பானைஓடுகள்

ஆதிச்சநல்லூரில்                           –  முதுமக்கள் தாழிகள்

செம்பியன் கண்டியூரில்             – கலையழகு மிகுந்த மண்கலங்கள்

கீழடியில்                                        – சுடுமண் பொருள்கள்

 

பா நான்கு வகைப்படும்:

1. வெண்பா செப்பலோசை
2. ஆசிரியப்பா அகவலோசை
3. கலிப்பா துள்ளல் ஓசை
4. வஞ்சிப்பா தூங்கலோசை

 

1. இன்பம் தருவது பண்புடையவர் நட்பு
2. நட்பு என்பது சிரித்து மகிழ மட்டுமன்று
3. பெருமையை அழிப்பது குன்றிமணியளவு தவறு
4. பணிவு கொள்ளும் காலம் செல்வம் மிகுந்த காலம்
5. பயனின்றி அழிவது நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது:

1. நிறை மேன்மை
2. பொறை பொறுமை
3. மதம் கொள்க
4. மையல் விருப்பம்

 

திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்:

1.  தமிழ்  தொல்காப்பியம்
2. கன்னடம் கவிராஜ மார்க்கம்
3. தெலுங்கு  ஆந்திர பாஷா பூஷனம்
4. மலையாளம்  லீலா திலகம்

 

அறிவுநிலை அறியும்‌ ஆற்றல்‌ உரையாசிரியர்களின்‌ எடுத்துக்காட்டு
ஓரறிவு உற்றறிதல்‌ (தொடுதல்‌ உணர்வு) புல்‌, மரம்
ஈரறிவு உற்றறிதல்‌ + சுவைத்தல் சிப்பி, நத்தை
மூவறிவு உற்றறிதல்‌ + சுவைத்தல்‌ + நுகர்தல்‌ கரையான்‌, எறும்பு
நான்கறிவு உற்றறிதல்‌ + சுவைத்தல்‌ + நுகர்தல்‌ + காணல் நண்டு, தும்பி
ஐந்தறிவு உற்றறிதல்‌ + சுவைத்தல்‌ + நுகர்தல்‌ + காணல் + கேட்டல் பறவை, விலங்கு
ஆறறிவு உற்றறிதல்‌ + சுவைத்தல்‌ + நுகர்தல்‌ + காணல் + கேட்டல் + பகுத்தறிதல்‌ (மனம்‌) மனிதன்‌
  1. குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
  2. மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
  3. சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
  4. சிந்து – ஒருவகை இசைப்பாடல்
  5. முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை; இராசசம் – போர், தீவிரமான செயல்; தாமசம் – சோம்பல், தாழ்மை)
  6. பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்.
  7. வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
  8. வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
  9. ஊனரசம் – குறையுடைய சுவை
  10. நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
  11. வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
  12. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
  13. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்
  14. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவை கள் – க. ரத்னம்
  15. தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா. ராஜன்
  16. தமிழர் சால்பு – சு. வித்யானந்தன
  17. ஏறுகோள் – எருதுகட்டி
  18. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  19. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
  20. நீலகிரி – கரிக்கையூர்
  21. மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
  22. தேனி – சித்திரக்கல் புடவு

பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று – சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்

தீரா இடும்பை தருவது – ஆராயாமை, ஐயப்படுதல்

நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்

பேணாமை – பாதுகாக்காமை

செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு

அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்

கண்டானாம் தான்கண்டவாறு – தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்

அறம்நாணத் தக்கது உடைத்து – அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்

மாற்றாரை மாற்றும் படை – பகைவரையும் நட்பாக்கும் கருவி (செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல்)

ஐந்துசால்பு ஊன்றிய தூண் – 1. பிறரிடம் அன்பும் 2. பழிக்கு நாணுதலும் 3. அனைவரிடமும் இணக்கமும் 4. இரக்கமும் 5. உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்

 

தரிசு நிலம் : பயிர் செய்யாத நிலம்

சிவல் நிலம் : செந்நிலம் அல்லது சிவந்த நிலம்

கரிசல் நிலம் : கரிய நிறமுடைய மண் கொண்ட நிலம் கரிசல் நிலம் (அ) கரிந்த பாலை நிலம்

முரம்பு நிலம் : பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டு நிலம்

புறம்போக்கு நிலம் : ஊர்ப்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்

சுவல் நிலம் : மேட்டு நிலம்

அவல் நிலம் : ‘அவல்’ என்பதன் பொருள் ‘பள்ளம்’. ஆகவே பள்ளமான நிலப்பகுதி அவல் என அழைக்கப்படுகிறது. விளை நிலமாகவும் அமைகிறது.

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்  –  உயிரினும் ஓம்பப் படும்

ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது.  –  நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்  –  ஒழுக்கத்தின் எய்துவர்.

 

சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது

அரை நாண் – இடையில் அணிவது

சுட்டி – நெற்றியில் அணிவது

குணடலம், குழை – காதில் அணிவது

சூழி – தலையில் அணிவது

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் – சருகும் சண்டும்

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை – மணி வகை

பெரிய மீசை சிரித்தார் – பண்புத்தொகை

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி – கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி –  என்னும் அடியில் பாக்கம் என்பது –  கடல் அருகே உள்ள ஊர் எனக் கூறுவர். · அல்லது நெய்தல் நிலத்து ஊர் எனவும் கூறுவர். · இவ்வடியில் சிற்றூர் என குறிக்கிறது.

பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் –  வானத்தையும் பேரொலியையும் குறிக்கிறது

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
  • பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories