Blog

பொறையுடைமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

பொறையுடைமை

1.அகழ்வாரைத்‌ தாங்கும்‌ நிலம்போலத்‌ தம்மை                                                (9th Tamil)

இகழ்வார்ப்‌ பொறுத்தல்‌ தலை. *****

விளக்கம்‌: நிலமானது, தன்னைத்‌ தோண்டுபவரையும்‌ தாங்குவதுபோல, நம்மை இழிவுபடுத்துவோரையும்‌ நாம்‌ பொறுத்துக்கொள்வதே சிறந்த பண்பு.

சொற்பொருள்‌ : அகழ்வாரை – தோண்டுபவரை; இகழ்வார்‌ – இழிவுபடுத்துவோர்‌; தலை – சிறந்த பண்பு.

இலக்கணக்குறிப்பு : பொறுத்தல்‌ – தொழிற்பெயர்‌; அகழ்வார்‌, இகழ்வார்‌ – வினையாலணையும்‌ பெயர்கள்‌

அணி: உவமை அணி

2.பொறுத்தல்‌ இறப்பினை என்றும்‌ அதனை

மறுத்தல்‌ அதனினும்‌ நன்று.

விளக்கம்‌: ஒருவர்‌ நமக்கு செய்யும்‌ தீமையை பொறுத்துக்‌ கொள்வதை விட மறந்து விடுவது நல்ல செயலாகும்‌.

சொற்பொருள்‌ : பொறுத்தல்‌ – பொறுத்துக்கொள்ளுதல்‌; இறப்பினை – பிறர்‌ செய்த துன்பத்தை.

இலக்கணக்குறிப்பு : மறத்தல்‌, பொறுத்தல்‌ – தொழிற்பெயர்கள்‌; நன்று – குறிப்பு வினைமுற்று.

3.இன்மையுள்‌ இன்மை விருந்தொரால்‌ வன்மையுள்‌

வன்மை மடவார்ப்‌ பொறை.

விளக்கம்‌: விருந்தினரை வரவேற்க முடியாத நிலை ஒருவனுக்கு வறுமையை விட மிகப்‌ பெரிய வறுமை ஆகும்‌. அதுபோல அறிவு

இல்லாதவர்கள்‌ செய்யும்‌ குற்றத்தைப்‌ பொறுத்துக்‌ கொள்வது வலிமையுள்‌ சிறந்த வலிமையாகும்‌.

சொற்பொருள்‌ : இன்மை – வறுமை; ஒரால்‌ – தவிர்த்தல்‌; மடவார்‌- அறிவற்றார்‌.

இலக்கணக்குறிப்பு : விருந்து – பண்பாகு பெயர்‌; ஒரால்‌, பொறை – தொழிற்பெயர்கள்‌.

அணி : எடுத்துக்காட்டு உவமையணி.

4.நிறையுடைமை நீங்காமை வேண்டின்‌, பொறையுடைமை 

போற்றி ஒழுகப்‌ படும்‌.    *****

விளக்கம்‌: நற்குணங்கள்‌ நம்மை விட்டு நீங்காமல்‌ இருக்க பொறுமையை இழக்காமல்‌ காத்து கொள்ள வேண்டும்‌.

சொற்பொருள்‌ : நிறை – சால்பு.

இலக்கணக்குறிப்பு : நீங்காமை – எதிர்மறைத்‌ தொழிற்பெயர்‌; போற்றி – வினையெச்சம்‌.

( இந்நாலு குறட்பாவும்‌ பொறுமையின்‌ சிறப்பினைக்‌ கூறுகின்றன. )

5.ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர்‌

பொறுத்தாரைப்‌ பொன்போற்‌ பொதிந்து.  *****

விளக்கம்‌: தீமை செய்தவரை பொறுத்துக்‌ கொள்ளாது தண்டிப்பவரை மதிக்கமாட்டார்கள்‌. ஆனால்‌ அத்தீங்கை பொறுத்துக்‌ கொள்பவரை பொன்னை

போல மதித்து போற்றுவர்‌.

சொற்பொருள்‌ : ஒறுத்தாரை – தண்டித்தவரை; ஒன்றாக – ஒரு பொருட்டாக; பொதிந்து

வைப்பர்‌ – (மனத்துள்‌) வைத்துக்கொள்வர்‌.

இலக்கணக்குறிப்பு : ஒறுத்தார்‌ – வினையாலணையும்‌ பெயர்‌; பொதிந்து – வினையெச்சம்‌.

6.ஒறுத்தார்க்‌ கொருநாளை இன்பம்‌ பொறுத்தார்க்குப்‌

பொன்றும்‌ துணையும்‌ புகழ்‌.  *****

விளக்கம்‌: தீங்கு செய்தவரைப்‌ பொறுத்து கொள்ளாது தண்டிப்பது அந்த ஒருநாள்‌ மட்டுமே மகிழ்ச்சி தரும்‌. அதை பொறுத்து கொண்டவர்களுக்கு

உலகம்‌ அழியும்‌ வரை புகழ்‌ உண்டாகும்‌.

சொற்பொருள்‌ : பொன்றும்‌ துணையும்‌ – உலகம்‌ உள்ளவரை.

இலக்கணக்குறிப்பு : ஒறுத்தார்‌, பொறுத்தார்‌ – வினையாலணையும்‌ பெயர்கள்‌.

7.திறனல்ல தற்பிறர்‌ செய்யினும்‌ நோநொந்(து)                                              (9th Tamil)

அறனல்ல செய்யாமை நன்று.

விளக்கம்‌: அறியாமையால்‌ ஒருவர்‌ செய்யும்‌ தீமையை எண்ணி வருந்தித்‌ தாமும்‌ தீமை செய்யாது பொறுத்துக்‌ கொள்வது சிறந்த பண்பாகும்‌.

சொற்பொருள்‌ : திறனல்ல – செய்யத்தகாத; நோநொந்து – துன்பத்துக்கு வருந்தி.

இலக்கணக்குறிப்பு : தற்பிறர்‌ – ஏழாம்‌ வேற்றுமைத்‌ தொகை; செய்யினும்‌ – இழிவுச்‌

சிறப்பும்மை; நொந்து – வினையெச்சம்‌; அறன்‌, திறன்‌ – ஈற்றுப்போலிகள்‌.

8.மிகுதியான்‌ மிக்கவை செய்தாரைத்‌ தாம்தம்‌                                                (9th Tamil)

தகுதியான்‌ வென்று விடல்‌.    *****

விளக்கம்‌: மடமையால்‌ தமக்கு தீமை செய்தவரை பொறுமையாக இருந்து வெற்றி கொள்ளல்‌ வேண்டும்‌.

சொற்பொருள்‌: மிகுதியான்‌-மனச்செருக்கால்‌;மிக்கவை- தீமை; தகுதியான்‌ – பொறுமையால்‌.

இலக்கணக்குறிப்பு : செய்தாரை – வினையாலணையும்‌ பெயர்‌; விடல்‌ – அல்‌ ஈற்று வியங்கோள்‌

வினைமுற்று.

( இந்நாலு குறட்பாவும்‌ பிறர்‌ செய்த தீங்கினைப்‌ பொறுத்துக்கொள்ளுதல்பற்றிக்‌ கூறுகின்றன. )

9.துறுந்தாரின்‌ தூய்மை உடையர்‌ இறந்தார்வாய்‌

இன்னாச்சொல்‌ நோற்கிற்‌ பவர்‌.

விளக்கம்‌: கொடிய சொற்களை பேசுபவர்கள்‌ முன்‌ பொறுமையாக இருப்பது துறவிகளை விட மேலாகக்‌ கருதுவர்‌.

சொற்பொருள்‌ : துறந்தார்‌- பற்றினை விட்டவர்‌; இறந்தார்‌ – வரம்பு கடந்தவர்‌; இன்னா – தீய; நோற்கிற்பவர்‌ – பொறுப்பவர்‌.

இலக்கணக்குறிப்பு : இறந்தார்‌, துறந்தார்‌, நோற்கிற்பவர்‌ – வினையாலணையும்பெயர்கள்‌;  இன்னாச்சொல்‌ – ஈறுகெட்ட எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌.

10.உண்ணாது நோற்பார்‌ பெரியர்‌ பிறர்சொல்லும்‌

இன்னாச்சொல்‌ நோற்பாரின்‌ பின்‌.

விளக்கம்‌: நோன்பு இருப்பவர்களை விடத் தம்மை இகழ்பவர்களை பொறுத்து கொள்பவர்களை மேலானவர்களாகக்‌ கருதுவர்‌.

சொற்பொருள்‌ : நோற்பார்‌ – நோன்பு மேற்கொள்பவர்‌; இன்னாச்சொல்‌ – தீய சொல்‌.

இலக்கணக்குறிப்பு : உண்ணாது – வினையெச்சம்‌.

( இவ்விரு குறட்பாவும்‌ பிறரின்‌ இழிச்சொற்களைப்‌ பொறுத்துக்கொள்ளுதல்‌ பற்றிக்‌ கூறுகின்றன.)

 

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories