மனோன்மணியம்
October 12, 2023
2025-01-11 13:57
மனோன்மணியம்
மனோன்மணியம் நூல் குறிப்பு
-
நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும்
-
வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
-
இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
-
எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
-
நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
-
இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
-
இடையே “சிவகாமி சரிதம்” என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் ஆசிரியர் குறிப்பு
-
ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
-
பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
-
இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
-
கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்
மனோன்மணியம் சுந்தரனார் சிறப்பு பெயர்
-
ராவ்பகதூர்
-
தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
மனோன்மணீயம் சுந்தரனார் படைப்புகள்
-
நூல் தொகை விளக்கம்
-
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
-
திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி
-
Some mile stones in tamil litt
-
Some early sovereigns of travameare
மனோன்மணீயம் சுந்தரனார் சிறப்பு
-
அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது
-
தமிழ்நாடு அரசு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி பெருமை படுத்தியுள்ளது.
-
இவரின் “நீராருங்கடலுடுத்த” என்ற தமிழ் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது
-
இவரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் = எம்.எஸ்.விசுவநாதன்
-
இவரைத் “தமிழ் செய்யுட் நாட இலக்கியத்தின் தந்தை” எனப் போற்றுவர்
கா.சு.பிள்ளை கூற்று
-
‘தமிழ் இலக்கியத்தில் கால ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்த பெருமை இவருடையதே” என்கிறார்.
மொழிப்பெயர்ப்பு நூல்கள்
-
இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.