மாணிக்கவாசகர்
October 21, 2023
2025-01-11 13:57
மாணிக்கவாசகர்
வாழ்க்கை குறிப்பு
-
இயற்பெயர் = தெரியவில்லை
-
பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்
-
ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர்
-
வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள்
-
மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம்
-
நெறி = ஞானம் நெறி
-
ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை
-
இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம்
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள்
-
8 ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார்
-
திருவெம்பாவை
-
போற்றித் திருவகவல்
திருவாசகம் வேறு பெயர்கள்
திருக்கோவையார் வேறு பெயர்கள்
-
திருசிற்றம்பலக்கோவை
-
ஆரணம்
-
ஏரணம்
-
காமநூல்
-
எழுத்து
-
இராசாக்கோவை
மாணிக்கவாசகர் சிறப்பு பெயர்கள்
-
திருவாதவூரார்
-
தென்னவன் பிரம்மராயன்
-
அழுது அடியடைந்த அன்பர்
-
வாதவூர் அடிகள்
-
பெருந்துறைப் பிள்ளை
-
அருள் வாசகர்
-
மணிவாசகர்
சிறப்புகள்
-
மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
-
இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார் (பரி=குதிரை)
-
பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.
-
திருவாசகத்தை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
-
இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.
தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
|
-
இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
-
பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.
-
புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.
-
“திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை
திருவாசகம் சிறப்புகள்
-
திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
-
“திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.
-
51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.
-
திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.
திருக்கோவையார் சிறப்புகள்
-
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.
-
திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்
-
“இராசாக்கோவை” என்று அழைக்கப்படும் நூல் = திருக்கோவையார் ஆகும்.
-
இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து
-
இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.
-
400 பாடல்களைக் கொண்டது.
-
கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது
-
திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.
குறிப்புகள்
-
அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
-
மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.
-
மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.
மேற்கோள்
-
நமச்சிவாயம் வாழ்க நாதம் தாள்வாழ்க
-
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
-
தென்னாடுடைய சிவனே போற்றி
-
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
-
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
-
உற்றாரை யார்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
-
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
-
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
-
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி