Blog

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

57
Old Syllabus

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் – குமரகுருபரர்
  • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
  • ஊர் – திருவைகுண்டம்
  • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
  • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
  • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
  • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
  • 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
  • இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது பிள்ளைத்தமிழ்.
  • பத்து பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள் கொண்டது.
  • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
  • பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.
  • புள்ளிருக்குவேளூரில் (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி.
  • அவர் மீது பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர் பெற்றது.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – பாடல் வரிகள்
ஆடுக செங்கீரை!
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை
செங்கீரைப் பருவம், பா.எண்.8
வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு
கிண்கிணி:-
கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.
அரைஞான் மணி:-
இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.
சிறு வயிறு:-
பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.
நெற்றிச் சுட்டி:-
பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.
குண்டலங்கள்:-
கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.
உச்சிக் கொண்டை:-
உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.
ஆடுக:-
வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக
பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.
அணிகலன்கள்
அணியப்படும் இடம்
சிலம்பு, கிணகிணி
காலில் அணிவது
அரை நாண்
இடையில் அணிவது
சுட்டி
நெற்றியில் அணிவது
குணடலம், குழை
காதில் அணிவது
சூழி
தலையில் அணிவது

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories