Blog

வினை செயல்வகை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

வினை செயல்வகை

  1. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

விளக்கம்:

ஒரு  செயலில்  ஈடுபட  முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள்   பற்றிய  ஆராய்ச்சியும்  முடிவடைந்திருக்க வேண்டும்.

முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

விளக்கம்:

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

3. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

விளக்கம்:

இயலும்  இடங்களில்  எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின்  அதற்கேற்ற  வழியை  அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

4. வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.

விளக்கம்:

ஏற்ற  செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக  முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை  குறையாக  அணைத்தது  போலக்

கேடு விளைவிக்கும்.

5. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

விளக்கம்:

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப்  போகும்  செயல்முறை,  உகந்த இடம்

ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

விளக்கம்:

ஈடுபடக்கூடிய  ஒரு  செயலால்  எதிர்பார்க்கப்படும்  பயன், அதற்கான முயற்சிக்கு  இடையே   வரும்   தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை

ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

7. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளங் கொளல்.

விளக்கம்:

ஒரு    செயலில்    ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து   முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

8. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

விளக்கம்:

ஒரு    செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு

யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

விளக்கம்:

நண்பருக்கு  நல்லுதவி  செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக்  கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

10. உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

விளக்கம்:

தம்மைவிட  வலிமையானவர்களை  எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும்  பலன்  கிட்டுமானால்

அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories