Blog

விருந்தோம்பல்‌

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

விருந்தோம்பல்‌

  1. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்:

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

  1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விளக்கம்:

விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டல்பாற்று அன்று.

  1. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுத லின்று.

விளக்கம்:

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.

  1. அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
    நல்விருந் தோம்புவா னில்.

விளக்கம்:

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.

  1. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சின் மிசைவான் புலம்.

விளக்கம்:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி மிச்சில் மிசைவான் புலம்.

  1. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
    னல்விருந்து வானத் தவர்க்கு.

விளக்கம்:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.

  1. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    றுணைத்துணை வேள்விப் பயன்.

விளக்கம்:

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.

  1. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.

விளக்கம்:

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி வேள்வி தலைப்படா தார்.

  1. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
    மடமை மடவார்க ணுண்டு.

விளக்கம்:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

  1. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.

விளக்கம்:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories