Blog

முத்துராமலிங்கத்தேவர்

Pasumpon-Muthuramalinga-Thevar-on-Thevar-Jayanthi
Old Syllabus

முத்துராமலிங்கத்தேவர்

முத்துராமலிங்கத்தேவர்
இயற்பெயர்
முத்துராமலிங்கத்தேவர்‌
ஊர்
 இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ பசும்பொன்‌
காலம்
30.10.1908 – 30.10.1963
பெற்றோர்‌
உக்கிர பாண்டியத்தேவர்‌ – இந்திராணி

குறிப்பு

  • இவருக்குக்‌ கற்பித்த ஆசிரியர்‌ குறைவற வாசித்தான்‌ என்பவர் ஆவார்‌.
  • வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.
  • முத்துராமலிங்கத்தேவர்‌ தமிழ்‌, ஆங்கிலம்‌ ஆகிய இருமொழிகளிலும்‌ சொற்பொழிவு ஆற்றும்‌ திறன்‌ பெற்றிருந்தார்‌.
  • சிலம்பம்‌, குதிரை ஏற்றம்‌, துப்பாக்கிச்சுடுதல்‌, சோதிடம்‌, மருத்துவம்‌ போன்ற பலதுறைகளிலும்‌ ஆற்றல்‌ உடையவராக விளங்கினார்‌. முத்துராமலிங்கத்தேவர்‌ இளமையிலேயே அரசியலில்‌ ஆர்வம்‌ கொண்டிருந்தார்‌.
  • முதலில்‌ சாயல்குடி என்னும்‌ ஊரில்‌ விவேகானந்தரின்‌ பெருமை என்னும்‌ தலைப்பில்‌ மூன்று மணிநேரம்‌ உரையாற்றினார்‌. அந்தக்‌ கூட்டத்தில்‌ பெருந்தலைவர்‌ காமராசரும்‌ இருந்தார்‌. ‘இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான்‌ கேட்டதில்லை’ முத்துராமலிங்கத்தேவரின்‌ வீரம்மிக்க பேச்சு விடுதலைப்‌ போருக்கு மிகவும்‌ உதவும்‌’ என்று காமராசர்‌ மகிழ்ந்தார்‌.
  • முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.
  • அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர் இதனால் அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்துள்ளது.
  • வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்தது.
  • வடஇந்தியாவில்‌ வாய்ப்பூட்டுச்‌ சட்டத்தின்படி பேசத்‌ தடை விதிக்கப்பட்ட தலைவர்‌ பாலகங்காதர திலகர்‌.
  • வங்கச்சிங்கம்‌ என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ்‌ சந்திரபோசுடன்‌ நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்‌. அவரைத் தமது அரசியல் குருவாக ஏறறுக்கொண்டார்.
  • முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்றுக் 06.09. 1939 ஆம் ஆண்டு நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத் தேவரின் முயற்சி ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். விடுதலைக்கு பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்.
  • 1938 கால கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தார்.
  • மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவனாந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
  • உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
  • பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்
  • முத்துராமலிங்கத் தேவர் தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தார்.
  • காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தப்பட்டிருந்த சமூகத்தினருடன் 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார் . அதனை எதிர்த்து அர்ச்சகர்கள்‌ ஆலயப்பணியைப்‌ புறக்கணித்தனர்‌. தேவர்‌ திருச்சுழியில்‌ இருந்து அர்ச்சகர்கள்‌ இருவரை அழைத்துவந்து ஆலய நுழைவுப்‌ போராட்டத்தை வெற்றிபெறச்‌ செய்தார்‌.
  • தெய்வீகம்‌, தேசியம்‌ ஆகிய இரண்டையும்‌ இரு கண்ணாகப்‌ போற்றியவர்‌ பசும்பொன்னார்‌. இவர்‌, “வீரம்‌ இல்லாத வாழ்வும்‌ விவேகமில்லாத வீரமும்‌வீணாகும்‌ என எடுத்துரைத்தவர்‌. இவர்‌ சமயச்‌ சான்றோராகவும்‌ கருதப்பட்டார்‌.
முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்ட இடங்கள்
  • அலிப்பூர்
  • அமராவதி
  • தாமோ
  • கல்கத்தா
  • சென்னை
  • வேலூர்
முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள்
  • தேசியம் காத்த செம்மல்
  • வித்யா பாஸ்கர்
  • பிரவசன கேசரி
  • சன்மார்க்க சண்டமாருதம்
  • இந்து புத்தசமய மேதை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்துள்ளார்.
முத்துராமலிங்கத்தேவருக்கு இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது.
முத்துராமலிங்கத்தேவர் நேதாஜி என்னும் பெயரில் வார இதழ் ஒன்றையும் நடத்தினார்.
திரு.வி.கலியாணசுந்தரனார்
முத்துராமலிங்கத்தேவரின் விடுதலை வேட்கையை அறிந்த திரு.வி.கலியாணசுந்தரனார் தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார்.
காமராசர்
சாயல்குடி என்னும் ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் முத்துராமலிங்கத்தேவரின்  பேச்சை கேட்ட பெருந்தலைவர் காமராசர். ‘இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்’ என்று காமராசர் மகிழ்ந்தார்.
அறிஞர் அண்ணா
‘தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது’ என்று தேவரைப் புகழ்ந்துள்ளார்.
இராஜாஜி
‘முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்’ என்று இராஜாஜி பாராட்டியுள்ளார்.
வடஇந்திய இதழ்கள்
பாராளுமன்றத்தில் இவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டியுள்ளன.
ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப் பரம்பரைச் சட்டம் ஆகும்.
பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் முத்துராமலிங்கத் தேவர்.
1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார் .
அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories