Blog

சிலப்பதிகாரம்

12
Old Syllabus

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்: வரலாற்றியல் பார்வை

ஆசிரியர்‌ குறிப்பு:
  • இளங்கோவடிகளின்‌ தந்‌தை இமயவரம்பன்‌ நெடுஞ்சேரலாதன்‌ ,  தாய்‌ நற்சோனை
  • இவரது தமையன்‌ சேரன்‌ செங்குட்டுவன்‌.
  • இளையவரான இளங்கோவே நாடாள்வார்‌ என்று கணியன்‌ கூறிய கருத்தைப்‌ பொய்ப்பிக்கு ம்‌ பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற்‌ கோட்டத்தில்‌ தங்கினார்‌. அரசியல்‌ வேறுபாடு கருதாதவர்‌, சமய வேறுபாடற்ற துறவி.
  • சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
  • இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
  • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • சிலம்பு அதிகாரம்‌ – சிலப்பதிகாரம்‌
  • கண்ணகியின்‌ சிலம்பால்‌ விளைந்த கதையை முதன்மையாகக்கொண்டது. ஆதலின்‌ சிலப்பதிகாரமாயிற்று.
  • சிலப்பதிகாரம்‌ எனும்‌ செந்தமிழ்க்‌ காப்பியம்‌ புகார்க்‌ காண்டம்‌, மதுரைக்‌ காண்டம்‌, வஞ்சிக்‌ காண்டம்‌ எனும்‌ முப்பெருங்கண்டங்களையும்‌ முப்பது காதைகளையும்‌ உடையது.
  • புகார்க்காண்டம்‌ பத்து காதைகளையும்‌, மதுரைக்‌ காண்டம்‌ பதின்மூன்று காதைகளையும்‌ வஞ்சிக்‌ காண்டம்‌ ஏழு காதைகளையும்‌ கொண்டுள்ளது
  • இது உரையிடப்பட்ட பாட்டுடைச்‌ செய்யுள்‌ எனவும்‌ வழங்கப்பெறும்‌
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
  • முதற்‌ காப்பியம்‌, இரட்டைக்‌ காப்பியம்‌, முத்தமிழ்‌ காப்பியம்‌, குடிமக்கள்‌காப்பியம்‌, ஒற்றுமைக்‌ காப்பியம்‌, நாடகக்‌ காப்பியம்‌ எனச்‌
  • சிலப்பதிகாரத்தைப்‌ போற்றி புகழ்வோர்‌.
  • இளங்கோவடிகள்‌ துறவு பூண்டு அமர்ந்த இடம்‌ குடவாயிற்‌ கோட்டம்‌ என்ற ஊர்‌.
  • குடவாயிற்‌ கோட்டம்‌ சேர நாட்டு ஊர்‌
  • மூன்று காண்டம்‌ முப்பது காதை. காதை – கதை பொதிந்துள்ள பாட்டு
  • புகார்‌ காண்டம்‌ : மங்கல வாழ்த்துப்‌ பாடல்‌ முதல்‌ நாடுகாண்‌ காதை வரை உள்ள 10 காதைகள்‌
  • மதுரைக்‌ காண்டம்‌: காடுகாண்‌ காதை முதல்‌ கட்டுரைக்‌ காதை வரை உள்ள 13 காதைகள்‌
  • வஞ்சிக்‌ காண்டம்‌ : குன்றக்‌ குரவை முதல்‌ வரந்தருகாதை உள்ள 7 காதைகள்‌
  • சிலப்பதிகாரம்‌ ஆசிரியப்‌ பாவாலும்‌ கொச்சகக்‌ கலிப்பாவாலும்‌ ஆனது.
சிலம்பின்‌ புகழ்‌:
“நெஞ்சை அள்ளும்‌ சிலப்பதிகாரம்‌ என்றோர்‌
மணியாரம்‌ படைத்த தமிழ்நாடு” –  பாரதியார்‌
“சிலப்பதிகாரச்‌ செய்யுளைக்‌ கருதியும்‌ … தமிழ்ச்‌
சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி
கொண்டிருந்தேன்‌” – பாரதியார்‌
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்‌
வள்ளுவனைப்‌ போல்‌ இளங்கோவனைப்‌ போல்‌
பூமிதனில்‌ யாங்கணுமே பிறந்ததில்லை” – பாரதியார்‌
“தமிழ்‌ கூறும்‌ நல்‌ உலகம்‌” என்று மூன்று நாடுகளையும்‌ ஒருங்கே
காணும்‌ தன்மை தொல்காப்பியத்தில்‌ உண்டு. ஆனால்‌ சங்க இலக்கியத்தில்‌ இல்லை.
“முதன்முதலாகத்‌ தமிழ்‌ மக்கள்‌ எல்லோரையும்‌ ஒருங்கே காணும்‌
நெறியில்‌ நின்று நூல்‌ செய்தவர்‌ இளங்கோவடிகள்‌ – மு.வரதராசனார்‌.
நாட்டுப்புறப்‌ பாடல்களுக்குச்‌ சிறப்புத்‌ தந்து முதலில்‌ பாடியவர்‌ இளங்கோவடிகள்‌
நாட்டுப்புறப்‌ பாடல்களுக்குச்‌ சிறப்புத்‌ தந்து இளங்கோவடிகளை அடுத்துப்‌ பாடியவர்‌ மாணிக்கவாசகர்‌
சைவ வைணவ நெறிகளையும்‌ பாடிய சமணநூல்‌ சிலப்பதிகாரம்‌
முதல்‌ தேசியக்‌ காப்பியம்‌ சிலப்பதிகாரம்‌
இரண்டாவது தமிழ்‌ தேசிய காப்பியம்‌ பெரிய புராணம்‌
பாவின்‌ வளர்ச்சிக்கு வித்திட்ட நூல்‌ சிலப்பதிகாரம்‌
சிலப்பதிகாரத்திற்குச்‌ சிறந்த உரை எழுதியவர்‌ அடியார்க்கு நல்லார்‌
முக்கிய கதை மாந்தர்கள்‌:
  • தலைவன்‌ கோவலன்‌
  • தலைவி கண்ணகி (சங்க காலத்துக்‌ கடையெழு வள்‌ளல்களில்‌ ஒருவனான பேகனின்‌ மனைவி பெயரும்‌ கண்ணகி)
  • ஆடல்‌ மங்கை மாதவி
  • கோவலன்‌ தந்‌தை மாசாத்துவான்‌
  • கண்ணகியின்‌ தந்‌தை மாநாய்கன்‌
  • மாதவியின்‌ தாய்‌ சித்திராபதி
  • கோவலனுக்கும்‌ மாதவிக்கும்‌ பிறந்தவள்‌ மணிமேகலை
  • கண்ணகியின்‌ தோழி தேவந்தி (இவள்‌ ஓர்‌ அந்தணப்‌ பெண்‌ இவள்‌ கணவன்‌ பாசண்ட சாத்தன்‌)
  • மாதவியின்‌ தோழி வயந்தமாலை
  • பெண்‌ சமணத்துறவி கவுந்தியடிகள்‌
  • ஆண்‌ பெளத்தத்‌ துறவி அறவண அடிகள்‌
செய்திகள்‌:
சிலம்பின்‌ குறிக்கோள்‌ மூன்று
  • கோவலன்‌ – மாதவி பிரிவுக்குக்‌ காரணம்‌ ஊழ்‌
  • கோவலன்‌ மதுரை சென்றதுக்குக்‌ காரணம்‌ ஊழ்‌
  • கோவலன்‌ கொலையுண்டதற்குக்‌ காரணம்‌ ஊழ்‌
மதுரை எரிந்‌ததற்குக்‌ காரணம்‌ ஊழ்‌ என்று இளங்கோவடிகள்‌ கருதுகிறார்‌.
இளங்கோவடிகளுக்குக்‌ கண்ணகியின்‌ வரலாற்றைக்‌ கூறியவர்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌.
கண்ணகியின்‌ வரலாற்றைச்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌ எழுத வேண்டும்‌ என்று சொன்னவர்‌ இளங்கோவடிகள்‌
கண்ணகியின்‌ வரலாற்றை எழுதத்‌ தகுதியுடையவர்‌ இளங்கோவடிகளே என்று சொல்லி அவரே எழுத வேண்டும்‌ என்று சொன்னவர்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌.
இளங்கோவடிகள்‌ தம்‌ நூலைச்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌ முன்‌ அரங்கேற்றினார்‌
மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ’அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ’நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்
  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்
நூல் அமைப்பு
  • காண்டங்கள் = 3 (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
  • காதைகள் = 30
  • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
  • இறுதி காதை = வரந்தருகாதை
புகார் காண்டம்
  • புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
  • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
  • பத்தாவது காதை = நாடுகாண் காதை
மதுரைக் காண்டம்
  • மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13
  • 11வது காதை = காடுகாண் காதை
  • 23வது காதை = கட்டுரைக் காதை
வஞ்சிக் காண்டம்
  • வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7
  • 24வது காதை = குன்றக்குரவை காதை
  • 30வது காதை = வரந்தருகாதை
நூல் எழுந்த வரலாறு
  • மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகிடோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
  • சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
  • சீத்தலைச் சாதனார்ர், இளங்கோவடிகளை “முதுகெலு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக” என வேண்டிக்கொண்டார்.
  • இளங்கோவடிகளும், “நாடதும் யாமோர் பாட்டைச்செய்யுள்” ஈனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்
  • ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்
சிலப்பதிகாரம் கதாபாத்திரங்கள் பெயர்கள்
  • கோவலனின் தந்தை மாசாத்துவான்
  • கண்ணகிடின் தந்தை மாநாய்கன்
  • கோவலனின் தோழன் மாடலன்
  • கண்ணகியின் தோழி தேவந்தி
  • மாதவியின் தோழி சுதமதி, வயந்தமாலை
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
  • கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்
  • கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
  • சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்
மேற்கோள்
  • மாசறு பொன்னே, வலம்புரி முத்தே
    காசறு விரையே, கரும்பே, தேனே

    அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே

    பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
  • இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
    கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
    பொற்புடைத் தெய்வம்
  • பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்
     குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories