Blog

கேள்வி

Old Syllabus

கேள்வி

  1. செல்வத்துள்‌ செல்வம்‌ செவிச்செல்வம்‌ அச்செல்வம்‌                                                   (9th Tamil)

செல்வத்துள்‌ எல்லாம்‌ தலை.

விளக்கம்‌: செல்வங்களுள்‌ சிறப்பான செல்வம்‌ கேள்விச்‌ செல்வமாகும்‌. அதுவே எல்லா செல்வத்தை விடவும்‌ சிறந்த செல்வமாகும்‌.

அணி: சொற்பொருள் பின்வருநிலையணி

 

2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும்‌ ஈயப்‌ படும்‌.

விளக்கம்‌: வயிற்று பசியை போக்க உணவு தேவை. அதுபோல அறிவு என்னும்‌ பசியை போக்க கேள்வி என்னும்‌ உணவு தேவை.

 

3.செவியுணவின்‌ கேள்வி உடையார்‌ அவியுணவின்‌

ஆன்றாரோ டொப்பர்‌ நிலத்து.

விளக்கம்‌: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள்‌ இந்த உலகத்தில்‌ வாழ்ந்தால்‌,௮வரை தேவர்களோடு ஒப்புவித்து மதிப்பர்‌.

 

4.கற்றிலன்‌ ஆயினும்‌ கேட்க அஃதொருவற்(கு)

ஒற்கத்தின்‌ ஊற்றாந்‌ துணை.

விளக்கம்‌: நூல்களை கற்கவில்லை என்றாலும்‌ கற்றவர்களிடம்‌ கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்‌. அது நம்‌ வாழ்வில்‌ தளர்ச்சி வரும்‌ போது சிறந்த

துணையாக இருக்கும்‌.

 

5.இழுக்கல்‌ உடையுழி ஊற்றுக்கோல்‌ அற்றே

ஒழுக்கம்‌ உடையார்வாய்ச்‌ சொல்‌.

விளக்கம்‌: ஒழுக்கம்‌ உடையவர்களின்‌ சொற்கள்‌ வழுக்கல்‌ உடைய நிலத்தில்‌ நடப்போர்க்கு ஊன்றுகோல்‌ போல உதவி புரியும்‌.

 

  1. எனைத்தானும்‌ நல்லவை கேட்க அனைத்தானும்‌                                                          (9th Tamil)

ஆன்ற பெருமை தரும்‌. *****

விளக்கம்‌: நல்லோர்‌ சொல்லும்‌ செய்தி சிறிதளவாக இருந்தாலும்‌, அது அளவுக்கு மீறிய பெருமையை‌த் தரும்‌.

 

7.பிழைத்துணர்ந்தும்‌ பேதைமை சொல்லார்‌ இழைத்துணர்ந்(து)

ஈண்டிய கேள்வி யவர்‌.

விளக்கம்‌: கேள்வி அறிவு உள்ளவர்கள்‌ ஒற்றை தவறாக உணர்ந்தாலும்‌ அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்‌.

 

8.கேட்பினும்‌ கேளாத்‌ தகையவே கேள்வியால்‌

தோட்கப்‌ படாத செவி.

விளக்கம்‌: கேள்வியால்‌ துளையிடப்படாத காது கேட்கும்‌ விருப்பம்‌ இல்லையென்றால்‌ செவிட்டுத்‌ தன்மைக்‌ கொண்ட காதாகக்‌ கருதப்படும்‌.

 

9.நுணங்கிய கேள்விய ரல்லார்‌ வணங்கிய                                                                                        (9th Tamil)

வாயின ராதல்‌ அரிது.

விளக்கம்‌: நுட்பமான கருத்துக்களைக்‌ கேட்டு அறியாதவர்‌ நல்ல சொற்களைப்‌ பேசுதல்‌ அரிது.

 

10.செவியின்‌ சுவையுணரா வாயுணர்வின்‌ மாக்கள்‌                                                                      (9th Tamil)

அவியினும்‌ வாழினும்‌ என்‌.

விளக்கம்‌: செவியால்‌ உணரகூடிய சுவையை உணராது, வாய்‌ சுவையை மட்டும்‌ கொண்டவர்களை மக்கள்‌ என்று கருதமாட்டார்கள்‌, மாக்கள்‌ என்றே

கருதுவர்‌

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories