Blog

வினைத்திட்பம்‌

Old Syllabus

வினைத்திட்பம்‌

வினைத்திட்பம்‌

1.வினைத்திட்பம்‌ என்பது தொருவன்‌ மனத்திட்பம்‌

மற்றைய எல்லாம்‌ பிற.

விளக்கம்‌:

மனஉறுதி என்பது ஒரு தொழிலை செய்யும்‌ உறுதி ஆகும்‌. வேறு

எந்த உறுதியும்‌ சிறந்தது இல்லை.

 

2.ஊறொரால்‌ உற்றபின்‌ ஒல்காமை இவ்விரண்டின்‌

ஆறென்பர்‌ ஆய்ந்தவர்‌ கோள்‌.

விளக்கம்‌:

வருமுன்‌ காத்தல்‌,வந்த பின்‌ தளராமை ஆகிய இரண்டும்‌

வினைத்திட்பம்‌ பற்றி அறிந்தவர்களின்‌ செயல்‌ ஆகும்‌.

 

3.கடைக்கொட்கச்‌ செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்‌

ஏற்றா விழுமந்‌ தரும்‌.

விளக்கம்‌:

ஒரு செயலை செய்து முடிக்கும்‌ வரை வெளியில்‌ தெறியாமல்‌

செய்வது திறமை ஆகும்‌.வெளிப்பட்டால்‌ துன்பத்தை தரும்‌.

 

4.சொல்லுதல்‌ யார்க்கும்‌ எளிய அரியவாம்‌

சொல்லிய வண்ணம்‌ செயல்‌.

விளக்கம்‌:

ஒரு செயலை இன்னவாறு செய்து முடிக்கலாம்‌ என்று சொல்வது

எளிதாகும்‌.௮தை போல்‌ செய்து முடிப்பது அறியதாகும்‌.

 

5.வீறெய்தி மாண்டார்‌ வினைத்திட்பம்‌ வேந்தன்கண்‌

ஊறெய்தி உள்ளப்‌ படும்‌.

விளக்கம்‌:

ஒரு செயலை செய்து பெருமை பெற்றவரின்‌ வினைத்திட்பமானது

உலகத்தால்‌ நன்கு மதிக்கபடும்‌.

 

6.எண்ணிய எண்ணியாங்‌ கெய்துப எண்ணியார்‌

திண்ணியர்‌ ஆகப்‌ பெறின்‌.

விளக்கம்‌:

ஒரு பொருளை பெறு எண்ணியவர்‌ அவற்றை பெற முயற்சி

செய்தால்‌ அவர்‌ எண்றியவற்றை பெற முடியும்‌.

 

7.உருவுகண்‌ டெள்ளாமை வேண்டும்‌ உருள்பெருந்தேர்க்‌

கச்சாணி யன்னார்‌ உடைத்து.

விளக்கம்‌:

பெறிய தேரினை இயக்க உதவும்‌ சிறிய அச்சாணி போல

சிறுஉடம்‌பினர்கள்‌ இவ்வுலகத்தில்‌ உண்டு.௮வர்களை நாம்‌ இகழ கூடாது.

 

8.கலங்காது கண்ட வினைக்கண்‌ துளங்காது

தூக்கங்‌ கடிந்து செயல்‌.

விளக்கம்‌:

மனதில்‌ எண்ணிய செயலை மனம்‌ தளராமலும்‌ காலம்‌

தாழ்த்தாமலும்‌ செய்து முடிக்க வேண்டும்‌.

 

9.துன்பம்‌ உறவரினும்‌ செய்க துணிவாற்றி

இன்பம்‌ பயக்கும்‌ வினை.

விளக்கம்‌:

ஒரு செயலை செய்யும்‌ போது பல துன்பங்கள்‌ வந்தாலும்‌ மனம்‌

தளராது செய்து முடிந்தால்‌ அச்செயல்‌ முடிவில்‌ இன்பத்தை தரும்‌.

 

10.எனைத்திட்ப மெய்தியக்‌ கண்ணும்‌ வினைத்திட்பம்‌

வேண்டாரை வேண்டா துலகு.

விளக்கம்‌:

வேறு எந்த உறுதி இருந்தம்‌ செய்யும் ‌ செயலில்‌ உறுதி

இல்லாதவரை இவ்வுலகம்‌ மதிக்காது.

 

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories