பா வகை
October 5, 2023
2025-01-11 13:57
பா வகை
பா வகை அலகிடுதல்
-
யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள்
-
யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
-
பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை.
-
நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா.
பாவின் ஓசை
-
பாக்களை ஓசைகளைக் கொண்டும் அறிந்துக் கொள்ளலாம்.
-
ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.
ஓசை எத்தனை வகைப்படும்
-
ஓசை, நான்கு வகைப்படும். அவை,
-
செப்பல் ஓசை (வெண்பா)
-
அகவல் ஓசை (ஆசிரியப்பா)
-
துள்ளல் ஓசை (கலிப்பா)
-
தூங்கல் ஓசை (வஞ்சிப்பா)
செப்பல் ஓசை:
-
வெண்பாவின் ஓசை = செப்பல் ஓசை.
-
திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவால் அமைந்த அறம் கூறும் நூல்களாகும்.
அகவல் ஓசை:
-
அகவல் ஓசை பெற்று வரும் பா = ஆசிரியப்பா.
-
ஆசிரியப்பாவின் ஓசை = அகவல் ஓசை.
-
ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் = அகவற்பா.
-
இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா.
-
இலக்கணக் கட்டுக்கோபு குறைவாக உள்ள பா வகை = அகவற்பா.
-
கவிதை வெளியீட்டிற்கு எளிதாக இருக்கும் பா வகை = அகவற்பா.
-
அகவர்பாவின் அமைந்த சங்க இலக்கியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.
துள்ளல் ஓசை:
-
கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.
-
துள்ளல் ஓசை பெற்று வரும் பா = கலிப்பா.
-
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை வகை = துள்ளல் ஓசை.
தூங்கல் ஓசை:
-
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை = தூண்கள் ஓசை.
-
தூங்கல் ஓசை பெற்று வரும் பா வகை = வஞ்சிப்பா.
-
வெண்பா ஐந்து வகைப்படும். அவை,
-
குரல் வெண்பா
-
சிந்தியல் வெண்பா
-
நேரிசை வெண்பா
-
இன்னிசை வெண்பா
-
பஃறொடை வெண்பா.
-
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை,
-
நேரிசை ஆசிரியப்பா
-
இணைக்குறில் ஆசிரியப்பா
-
நிலைமண்டில ஆசிரியப்பா
-
அடிமறி மண்டில ஆசிரியப்பா
வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கண அட்டவணை
பொது இலக்கணம்
|
வெண்பா
|
ஆசிரியப்பா
|
ஓசை
|
செப்பல் ஓசை
|
அகவல் ஓசை
|
சீர்
|
ஈற்றடி முச்சீர்
ஏனைய அடிகள் நாற்சீர்
இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்
|
ஈரசைச் சீர் மிகுதியாகவும்
காய்ச்சீர் குறைவாகவும் வரும்.
|
தளை
|
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வரும்.
|
ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை விரவியும் வரும்.
|
அடி
|
2 அடி முதல் 12 அடி வரை வரும்.
கலிவெண்பா 13 அடிக்கு மேற்பட்டு வரும்.
|
3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும்.
|
முடிப்பு
|
ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும்.
|
ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.
|
குறள் வெண்பா
-
குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
-
முதலடி நான்கு சீர்களாய் வரும் = அளவடி.
-
இரண்டாம் அடி மூன்று சீர்களாய் வரும் = சிந்தடி.
அலகிடுதல்:
-
அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்ப்பாடு காணுதல் ஆகும்.
ஓரசைச்சீர்:
-
நேர் = நாள்
-
நிரை = மலர்
-
நேர்பு = காசு
-
நிரைபு = பிறப்பு
ஈரசைச்சீர்:
-
நேர் நேர் = தேமா
-
நிரை நேர் = புளிமா
-
நிரை நிரை = கருவிளம்
-
நேர் நிரை = கூவிளம்
மூவசைச்சீர்:
-
நேர் நேர் நேர் = தேமாங்காய்
-
நிரை நேர் நேர் = புளிமாங்காய்
-
நிரை நிரை நேர் = கருவிளங்காய்
-
நேர் நிரை நேர் = கூவிளங்காய்
-
நேர் நேர் நிரை = தேமாங்கனி
-
நிரை நேர் நிரை = புளிமாங்கனி
-
நிரை நிரை நிரை = கருவிளங்கனி
-
நேர் நிரை நிரை = கூவிளங்கனி.
யாப்போசை தரும் பாவோசை
-
“யாப்பதிகாரம்” என்ற நூலை எழுதியவர் = புலவர் குழந்தை.
-
செப்பலோசை = இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
-
இருவர் உரையாடுவது போன்ற ஓசை = செப்பலோசை.
-
அகவலோசை = ஒருவர் பேசுதல் போன்ற ஓசை.
-
ஒருவர் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை = அகவலோசை.
-
ஒருவர் பேசுதல் போன்ற ஓசை = அகவலோசை.
-
துள்ளலோசை = கன்று துள்ளினாற்போலச் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை.
-
தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை = துள்ளலோசை.
-
தூங்கலோசை = சீர்தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை.
-
தாழ்ந்தே வரும் ஓசை = தூங்கலோசை.