Blog

இராசராச சோழன் உலா

11
Old Syllabus

இராசராச சோழன் உலா

இராசராச சோழன் உலா
  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது.
  • உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலாவர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.
  • உலா கலிவெண்பாவால் இயற்றப்படும்.
  • இவ்விலக்கியம் உலாப்புறம் எனவும் வழங்கப்படும்.
உலாவின் முன்னிலை
  • பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடை சூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
உலாவின் பின்னிலை
  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாகக் கூறுவன உலாவின் பின்னிலை என்று கூறுவர்.
உலாவில் பெண்களின் ஏழு பருவங்கள்
  • ஏழு பருவப் பெண்களின் வயது முறையைப் பின் வருமாறு கூறுவர். பேதை 5 – 7, பெதும்பை 8 – 11, மங்கை 12 – 13, மடந்தை 14 – 19, அரிவை 20 -25, தெரிவை 26 – 32, பேரிளம் பெண் 33-40.
ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு
  • இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுகிறார்.
  • ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
  • அம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் மூவருலா எனப்படுகிறது.
  • தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் இயற்றிய வேறு நூல்கள் ஆகும்.
  • கூத்தர் என்பதே இவர் இயற்பெயர்.
  • ஒட்டம் (பந்தயம்) வைத்துப்பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார்.
  • இவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories