இனவெழுத்துகள் அறிதல்
December 27, 2024 2025-02-26 9:53இனவெழுத்துகள் அறிதல்
பிறப்பு, ஒலிப்பு ஆகியவற்றில் ஒத்த தன்மையில் இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் அல்லது நட்பு எழுத்துகள் என்பர்.
இன எழுத்துகளை உயிர் இன எழுத்துகள், மெய் இன எழுத்துகள் என இரண்டாகக் கூறுவர்.
மனிதர்களைப்போலத்தான் எழுத்துகளும். அவற்றுக்குள் நட்பும் உண்டு; இனமும் உண்டு.
முதலில், உயிர் இன எழுத்துகளைக் காண்போம். உயிர் இன எழுத்துகள் :
உயிர் எழுத்துகள் (12) :
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
இப்பன்னிரெண்டு உயிர் எழுத்துகளை இரு வகையாகப் பிரிப்பர். குறில்(5) நெடில்(7)
குறில் எழுத்துகள் (5) :
அ | இ | உ | எ | ஒ |
ஆகிய ஐந்தும் ஒரு மாத்திரை அளவு கொண்டு குறில் எழுத்துகளாக ஒலிக்கின்றன.
நெடில் எழுத்துகள் (7) :
ஆ | ஈ | ஊ | ஏ | ஐ | ஓ | ஔ |
ஆகிய ஏழும் இரண்டு மாத்திரை அளவு கொண்டு நெடில் எழுத்துகளாக ஒலிக்கின்றன. இவற்றின், ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.
அ | ஆ |
இ | ஈ |
உ | ஊ |
எ | ஏ |
___ | ஐ |
ஒ | ஓ |
___ | ஔ |
உயிர் எழுத்துகளில் நெடிலுக்கு குறில் இன எழுத்துகளாக வரும்.
ஆ | அ |
ஈ | இ |
ஊ | உ |
ஏ | எ |
ஐ | இ |
ஓ | ஒ |
ஔ | உ |
ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இ என்னும் குறில் எழுத்து இனமாகும்.
ஔ என்னும் நெடில் எழுத்துக்கு உ என்னும் குறில் எழுத்தும் இனமாகும்.
சொற்களில் உயிர் எழுத்துகள் இணைந்து வருவதில்லை.
அளபெடையில் மட்டும் உயிர்மெய் நெடிலைத் தொடர்ந்து அதற்கு இனமாகிய குறில் எழுத்து இணைந்து வரும்.
சான்றுகள் :
அம்மாஅ வெரூஉம் தம்பீஇ தூஉம் ஓஒதல் நல்லபடாஅ உறாஅர்க்கு வரனசைஇ உறாஅமை எடுப்பதூஉம் நச்சப்படாஅ கெடுப்பதூஉம் கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் அன்புஒரீஇ இலாஅ உண்பதூஉம் உடுப்பதூஉம் உறாஅ மரீஇ அதூஉம் உரனசைஇ
மெய் எழுத்துகள்(18) :
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |
மூன்று இனங்களாகப் பிரிப்பர்.
வல் இனம் (6) | மெல் இனம் (6) | இடை இனம் (6) |
க் | ங் | ய் |
ச் | ஞ் | ர் |
ட் | ண் | ல் |
த் | ந் | வ் |
ப் | ம் | ழ் |
ற் | ன் | ள் |
மெய் எழுத்துகளில் ஆறு மெல் இன எழுத்துகளும் ஆறு வல் இன எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன.
மெல் இன எழுத்துகளுக்குப் பின்பு வல் இன எழுத்துகள் வருகின்றன.
மெல் இனம் | வல் இனம் | இன எழுத்துகள் | சான்று |
ங் | க் | ங்க் | சங்கு |
ஞ் | ச் | ஞ்ச் | வஞ்சி |
ண் | ட் | ண்ட் | வண்டி |
ந் | த் | ந்த் | பந்து |
ம் | ப் | ம்ப் | கம்பு |
ன் | ற் | ன்ற் | கன்று |
தங்கல் | செங்கல் | வங்கம் | பங்கு | பங்கம் | தங்கம் |
கஞ்சி | பஞ்சு | தஞ்சம் | கஞ்சம் | அஞ்சேல் | மஞ்சு |
தண்டு | வண்டு | மண்டி | தண்டி | கண்டு | வேண்டு |
சந்து | சந்தி | வந்து | கடந்த | பாய்ந்து | பொந்து |
பாம்பு | கம்பம் | தெம்பு | செம்பு | சோம்பு | தாம்பரம் |
நன்றி | பன்றி | வென்று | சென்ற | நன்று | அன்று |
பொங்கல் | அங்கு | எங்கள் | அங்கம் | மங்களம் | சங்கிலி |
மஞ்சள் | வஞ்சம் | பஞ்சம் | கெஞ்சி | அஞ்சி | இஞ்சி |
பண்டம் | கண்டம் | தூண்டில் | தூண்டும் | நீண்ட | அண்டம் |
வெந்து | பந்தல் | தந்ததே | தெளிந்து | ஐந்து | பிரிந்து |
கம்பளம் | தம்பி | கம்பி | தும்பி | வெம்பி | விரும்பி |
இன்றி | சான்று | தென்றல் | நின்று | இயன்ற | ஒன்று |
இடை இனம் ஆறும் எழுத்துகள் ஒரே இனமாக வரும். தமிழ் எழுத்துகளில் ஆய்த (ஃ) எழுத்திற்கு மட்டும் இனம் இல்லை.
“ங்” என்னும் எழுத்துக்குப் பின்னால் ‘க’ இன எழுத்தே வரும். ‘ங்’, ‘க’ இரண்டும் நண்பர்கள். (எ.கா.) சிங்கம், தங்கை.
அதேபோல் ‘ஞ்’, ‘ச’ இரண்டும் நண்பர்கள். இவ்விரண்டும் சேர்ந்தே வரும். (எ.கா) மஞ்சள், அஞ்சாதே.
ண்ட, ந்த, ம்ப, ன்ற – எழுத்துகளும் நண்பர்கள். பெரும்பாலும் இவை சேர்ந்தே வரும். (௭.கா,) பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகள் (உடனிலை மெய்ம்மயக்கம்)
தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்தோடு மட்டும் சேர்ந்து வரும்.(எ.கா) பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
க், ச், த்,ப் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும் எழுத்துகள். நீங்களும் இவ்வாறு சில சொற்களைச் சேர்த்துப் பாருங்கள்.
தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் எழுத்துகள்(வேற்றுநிலை மெய்ம்மயக்கம்) (௭.கா) சார்பு, வாழ்க்கை.
ர், ழ் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் சேர்ந்து வாரா. பிற எழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும் சேர்ந்து வரும் எழுத்துகளும் உள்ளன. (௭.கா) ற் – குற்றம், மேற்கு; ன் – அன்னம், அன்பு.