Blog

அம்பேத்கர்

Class 59 இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌

அம்பேத்கர்

அம்பேத்கர்

அம்பேத்கர் 14.04.1891-ல் மகாராட்டிர மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் அம்பவாதே என்னும் ஊரில் பிறந்தார்.

அம்பேத்கரின் பெற்றோர் ராம்ஜி சக்பால் – பீமா பாய்.

பீமாராவ் ராம்ஜி படித்த பள்ளியில் மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், பீமாராவ் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் என்னும் தம் பெயரைப் அம்பேதகர் என்று மாற்றிக் கொண்டார்

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர்.

அரசியலமைப்புச்‌ சட்ட வரைவுக்குழு

இந்த குழுவின் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இருந்தார். அவர் “இந்திய அரசியலமைப்பின் தந்தை ” என்றும் அங்கீகரிக்கப்படுகிறார். வரைவுக் குழுவின் மற்ற உறுப்பினர்களாக என் கோபாலசாமி, அல்லாடி கிருஷ்ணசாமி, டாக்டர் கேஎம் முன்ஷி, சையத் முகமது சாதுல்லா, என் மாதவ் ராவ், டிடி கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இருந்தனர்

 

அம்பேத்கர் 1912-ம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பரோடா மன்னர்‌ சாயாஜிராவ்‌ உதவியுடன்‌ உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்‌ கொலம்பியா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் பெற்றார்.

1924-ம் ஆண்டு அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை அமைப்பை நிறுவினார்.

1935-ம் ஆண்டு மாநில சுயசாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய முதலாவது வட்ட மேசை மாநாடு 12.11.1930 ஆம்‌ ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின்‌ சார்பாளராக அம்பேத்கருடன்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த இராவ்பகதூர்‌ இரட்டைமலை சீனிவாசனும்‌ கலந்துகொண்டார்‌.

ஒடுக்கப்பட்டோர் பாரதம் என்றும் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு 1927.

1930-ம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தி வெற்றி கொண்டார்.

சமாஜ் சமாத சங்கம் சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம்

அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 1990

அம்பேத்கர் மறைந்த ஆண்டு 06.12.1956

அம்பேத்கரின் பொன் மொழி

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று

முதல் தெய்வம் – அறிவு

இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை

மூன்றாவது தெய்வம் – நன்னடத்தை

 

அம்பேத்கர் புத்த சமயக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டவர்.

இலங்கையில் நடைபெற்ற புத்த துறவிகள் கருத்தரங்கிலும், உலக பெளத்த சமய மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.

14.10.1956-ம் ஆண்டு நாக்பூரில் புத்த சமயத்தில் இணைத்து கொண்டார்.

அவர் எழுதிய புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகம் அவரது மறைவுக்கு பின் 1957-ம் ஆண்டு வெளியானது.

 

இங்கிலாந்து

கனடா

ஐக்கிய அமெரிக்கா

சோவியத் யூனியன்

அயர்லாந்து

ஜெர்மனி

ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்கா

சட்டங்களை ஆராய்ந்து இந்திய நாட்டின் சட்டம் இயற்றப்பட்டது

 

பூனா ஒப்பந்தம்

“ஒடுகக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும்” என்று இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.

அதனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 24.09.1931-ல் காந்தியடிகளும், அம்பேத்கரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

1935-ம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் நலனைப் பாதுகாக்க தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.

சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் 15 பேரையும் வெற்றி பெறச் செய்தார்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories