Blog

மு மேத்தா

123
Old Syllabus

மு மேத்தா

மு மேத்தா
குறிப்பு
இயற்பெயர்:  முகமது மேத்தா
ஊர்: பெரியகுளம்
இவர் கல்லூரிப் பேராசரியர்
மு மேத்தா கவிதை நூல்கள்
  • கண்ணீர்ப் பூக்கள் (முதல் கவிதை தொகுப்பு)
  • ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
  • அவர்கள் வருகிறார்கள்
  • நடந்த நாடகங்கள்
  • முகத்துக்கு முகம்
  • கலைஞருக்கும் தமிழ் என்று பெயர்
  • கனவுக் குதிரைகள்
  • காத்திருந்த காற்று
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • இதயத்தில் நாற்காலி
  • என் பிள்ளைத்தமிழ்
  • ஒற்றைத் தீக்குச்சி
  • மனிதனைத் தேடி
  • ஒருவானம் இரு சிறகு
  • மனச்சிறகு
  • கனவுகளின் கையெழுத்து
  • கம்பன் கவியரங்கில்
  • என்னுடைய போதி மரங்கள்
  • திருவிழாவில் தெருப்பாடல்கள்
  • நந்தவன நாட்கள்
  • ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்திய அகாடமி விருது)
  • நாயகம் ஒரு காவியம் (கடைசி படைப்பு)
  • காற்றை மிரட்டிய சருகுகள்
நாவல்
  • சோழ நிலா
  • மகுடநிலா
சிறுகதைகள்
  • அவளும் நட்சதிரம் தான்
  • கிழித்த கோடு
  • பக்கம் பார்த்து பேசுகிறேன்
  • கதைக் கவிதை
  • வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை
  • நாணும் என் கவிதையும்
  • திறந்த புத்தகம்
உரைநடை நூல்கள்
  • மேத்தாவின் முன்னுரைகள்
  • நினைத்தது நெகிழ்ந்தது
  • ஆங்காங்கே அம்புகள்
கவியரங்கக் கவிதை
  • முகத்துக்கு முகம்
மு மேத்தா சிறப்புகள்
  • இவர் எழுதிய நூலான “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
  • இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.
  • சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.
  • இவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
  • இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.
  • கவிஞர் வாலியின் ‘அவதார புருஷன்’ எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய ‘நாயகம் ஒரு காவியம்’ என்கிற நூல்தான். ”அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்” என்றார் வாலி.
  • ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று கூறியவர்.
  • 1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75′ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
  • மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது = நாயகம் ஒரு காவியம்.
  • ‘சிறந்த கவிதைகளுக்கு அடையாளம் அவை வாசகனின் நினைவில் திரும்பத் திரும்ப என்ற வகையில் எழுதப்பட்டதுதான் மு.மேத்தாவின் கவிதைகள் வரவேண்டும்’ என்கிறார் தமிழண்ணல்.
  • “கவிதை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக, இனிமையாக உலவிக் கொண்டிருந்தவர் மேத்தா’ என டாக்டர் பொற்கோ குறிப்பிட்டுள்ளார்.
  • ‘மேத்தாவின் கவிதை நடை எல்லோரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். சமூக பிரக்ஞையைப் படம் பிடிக்கும். உயிர்த் துடிப்பும், கொந்தளிப்பும் கொண்டவை’ என்கிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories