வாணிதாசன்
August 14, 2023 2025-01-11 13:56வாணிதாசன்
வாணிதாசன்
வாணிதாசன்
இயற்பெயர் |
எத்திராசலு (எ) அரங்கசாமி |
பெற்றோர் |
அரங்க திருக்காமு – துளசியம்மாள் |
ஊர் |
புதுவையை அடுத்த வில்லியனூர் |
காலம் |
22.07.1915 – 07.08.1974 |
துணைவியார் |
ஆதிலட்சுமி |
தாய்மொழி = தெலுங்கு
வாணிதாசன் குறிப்பு
-
இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
-
இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
-
உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
-
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர்
-
இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
-
பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
-
இவரின் முதல் பாடல் = பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா!
-
தான் வாழ்ந்த வீட்டிற்கு “புரட்சி அகம்” எனப் பெயரிட்டார்
-
இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
-
இவர் எல்லப்ப் வாத்தியார், முத்துக்குமார சுவாமி பிள்ளை, பாரதிதாசன் மற்றும் முடியரசன் ஆகியோரிடம் தமிழ் கற்றவர்.
-
1950 ஆம் ஆண்டு பாரதிதாசன் நடத்திய “அழகின் சிரிப்பு” என்ற கவியரங்கு நிகழ்ச்சியில் முடியரசன் முதல் பரிசையும், வாணிதாசன் 2-வது பரிசையும் வென்றனர்.
வாணிதாசன் சிறப்பு
-
பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
-
பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
-
மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
-
மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டிற்கு பாரதிதாசரும் வாணிதாசரும் இரு கண்மணிகளாக இருந்து இக்காலத்துக்கு வேண்டிய வகையில் பாட்டின் மூலமாக செய்துவரும் தொண்டு பெரிதும் பாராட்டத்தக்கது
-
மயிலை சிவமுத்து = பாரதியார், பாரதிதாசன் ஆகிய இந்த இருவரினும் விஞ்சிய வகையில் பாடி வருகிறார்
-
மயிலை சிவமுத்து = இவருடைய பாடல்களை உலகப் பெருங்கவிஞருள் ஒருவரான ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களுக்கு நிகராக கருதலாம்
-
மயிலை சிவமுத்து = மடமையில் துயிலும் மக்கள் விழிகளைத் திறந்து பார்த்துப் புத்தம் புதுவாழ்வு பெற்று வாழ நம் தமிழ்நாட்டுத் தாகூராகிய வாணிதாசனார் பல்லாண்டு வாழ்வாராக
-
சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
-
குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே
-
இவர் பெயரால் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது
-
திரு.வி.க = “திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்பது எனது வேட்கை” என்றார்
-
மா.இராமலிங்கம் = இயற்கையை பாடுவதில் இவரை மிஞ்ச தற்கால கவிஞர்கள் யாரும் இல்லை
-
கண்ணதாசன் = தோழர் வாணிதாசனாரது கவிதைகளை படிக்கும் பொது சில சமயங்களில் பாரதிதாசனுக்கும் முன்னாலே போகிறார் என்ற எண்ணம் தட்டும்.
-
கண்ணதாசன் = இவரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் “நோபல் பரிசு” கிடைக்கும்
-
பாராதிதாசன் கூறியது,
எல்லாரும் நல்லார் என்(று) எண்ணுவார் இன்றமிழ்வல்ல கவிவாணி தாசனார் – அல்லும்பகலும் தமிழர் தம் பண்பாடு பற்றிப்புகழும் பாட்(டு) ஒவ்வொன்றும் பொன் |
-
திருநாவுக்கரசு = தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் முதிர்ந்த அறிவும், கனிந்த அனுபவமும் பெற்று விளங்குபவர் கவிஞர் திரு வாணிதாசன் ஆவார்.
- உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர்தம் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வாணிதாசன் சிறப்பு பெயர்கள்
-
கவிஞரேறு
-
பாவலர் மணி
-
தமிழ்நாட்டுத் தாகூர் (மயிலை சிவமுத்து)
-
தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்
-
ரமி
வாணிதாசன் பாடல் வரிகள்
*. கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும்
‘நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! *
சொற்பொருள்: பதுமை – உருவம்; மெய்ப்பொருள் – நிலையான பொருள்; கணக்காயர் – ஆசிரியர்.
நூல் குறிப்பு : கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்னும் பாடல் தொகுப்பிலிருந்து “மெய்ப்பொருள் கல்வி” என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள பாடல், பாடப்பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.